இந்தியாவில் இருந்து 10 ஆயிரத்து 800 கொரோனா தடுப்பூசிகள் பஹ்ரைன் நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் நாட்டிற்கு விமானம் மூலம் 10 ஆயிரத்து 800 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. கொரோனா தடுப்பூசிகள் வியாழக்கிழமை மியான்மர் சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக பூடான், மாலத்தீவு மற்றும் நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு மத்திய அரசால் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.