JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரி சார்பில் ஆட்டிசம் விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆட்டிசம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-09 09:36 GMT

ஆட்டிசம் குறைபாட்டை மைம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நர்சிங்  கல்லூரி மாணவிகள்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நர்சிங் கல்லூரி மாணவர்களால் ஏப்ரல் 5ம் தேதி அன்று ஆட்டிசம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.



நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகள்.

ஓலப்பாளையம் கிராமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜமுனாராணி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக உளவியல் பேராசிரியர் தேவி, கலந்து கொண்டார். மன இறுக்கம் மற்றும் மனபிறழ்வு  கொண்ட குழந்தைகளை  இந்த சமூகத்தில் சக மனிதர்காளாக எவ்வாறு   ஏற்றுக்கொள்வது என்பதற்கான விளக்கங்களை வழங்கினார். 


நமது சமுதாயத்தில் ஆட்டிசம் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஒரு பகுதியினராக இருப்பதால் அவர்களை எவ்வாறு சக மனிதர்களாக நடத்தவேண்டும் என்பது குறித்து நர்சிங் கல்லூரி மாணவர்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நர்சிங் மாணவர்கள் நடிப்பு மூலமாகவும், மைம் மற்றும் போஸ்டர்கள் மூலமாகவும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இறுதியாக  செவிலியர் மாணவர்கள் திட்ட செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை (Feedback) கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News