துறையூர் அருகே மனநலம் பாதித்த மகளை தந்தையே வேட்டையாடிய கொடூரம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2021-05-27 09:45 GMT

கோப்பு படம்

திருச்சி துறையூர் அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜூ(61). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இதில் சுதா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாவார்.

சாமி கும்பிடுவதற்காக இளைய மகள் கோகிலா சென்விட்டார். வீட்டிற்கு வந்த கோகிலா அப்பொழுது தந்தை ராஜு மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் பலாத்காரம் செய்வதை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டுள்ளார்.

இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோகிலா புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுதா 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News