அடுத்து வருகிறது லாம்ப்டா வைரஸ்: டெல்டா வகைகளை விட ஆபத்தானது

கொரோனா 3 வது அலை அக்டோபரில் உச்சகட்டமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Update: 2021-07-08 02:22 GMT

லாம்ப்டா வைரஸ்- மாதிரி படம்

அடுத்து வருகிறது லாம்ப்டா வைரஸ்: டெல்டா வகைகளை விட ஆபத்தானது.

கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சகட்டமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், இந்தியா  உட்பட பல்வேறு நாடுகள் 3வது அலையை  எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்டா வகைகளை விட ஆபத்தாக  உருமாறிய 'லாம்ப்டா' என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டில்தான் இந்த வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு பெருவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 82% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பான் அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  

இந்த வைரஸ் தற்போது இங்கிலாந்திலும் பரவி உள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று இங்கிலாந்து வந்த 6 பேருக்கு இந்த வைரஸ் உறுதியாகி உள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் இல்லை. கடந்த 4 வாரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இது, விரைவில் மேலும் பல நாடுகளுக்கு பரவும் என அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News