ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் அவர்களின் திருமணம் எப்போது?

வாரணாசியில் படமாக்கப்பட்ட வியப்பில் ஆழ்த்திய 'கேசரியா' பாடலின் அழகிய காட்சியை இயக்குனர் அயன் முகர்ஜி பகிர்ந்துள்ளார்

Update: 2022-04-13 06:07 GMT

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் அவர்களின் திருமணம் எப்போது?

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் அவர்களின் வரவிருக்கும் திருமண கொண்டாட்டங்களின் விளிம்பில் வாரணாசியில் படமாக்கப்பட்ட வியப்பில் ஆழ்த்திய 'கேசரியா' பாடலின் அழகிய காட்சியை இயக்குனர் அயன் முகர்ஜி பகிர்ந்துள்ளார்! பிரம்மாஸ்திரா பகுதி ஒன்று: சிவா செப்டம்பர் 9, 2022 அன்று வெளியாகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் ரன்பீர் கபூரை சில வருடங்களாக காதலித்துவந்தார்.இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இருப்பினும் எப்போது திருமணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதற்கிடையே இருவரின் திருமணமும் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற இருக்கிறது என தகவல் வெளியானது. இதனை ஆலியா பட்டின் உறவினர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் ஏப்ரல் 13 ஆம் தேதி மெஹந்தியுடன் திருமண விழா தொடங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், திருமண தேதி முன்கூட்டியே கசிந்ததாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மீண்டும் திருமண தள்ளி போயுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆலியாவின் சகோதரர் ராகுல் பட், "ஏப்ரல் 14ஆம் தேதிதான் திருமணம் நடப்பதாக இருந்தது. இப்போது திருமணம் அந்த நாளிலிருந்து வேறு ஒரு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனேகமாக 17ஆம் தேதி வரவேற்பும், 20 ஆம் தேதி திருமணமும் நடக்க வாய்ப்புகள் அதிகம்" என கூறினார்.

திருமணம் ஆர்.கே. ஹவுஸிலும், வரவேற்பு நிகழ்ச்சியானது மும்பையில் இருக்கும் தாஹ் மஹால் பேலஸிலும் நடைபெறும் என தெரிகிறது. இந்தத் திருமணத்தில் கரண் ஜோஹர், ஷாருக்கான், சஞ்சய் லீலா பன்சாலி, அகன்ஷா ரஞ்சன், அனுஷ்கா ரஞ்சன், ரோஹித் தவான், வருண் தவான், ஜோயா அக்தர் என ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News