சரத்பாபுவின் நிலை கவலைக்கிடமா..? உறுப்புகள் செயலிழப்பு.. மருத்துவர்களின் ‘அப்டேட்’

நடிகர் சரத் ​​பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக ஏஐஜி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2023-05-06 07:52 GMT

நடிகர் சரத்பாபு

நடிகர் சரத்பாபுவுக்கு இப்போது 71 வயதாகிறது,சமீபகாலமாக வயது மூப்பு காரணமாக படங்களில் நடிக்காமல் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார் சரத்பாபு . இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அவரது உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சமீபத்தில் அவருக்கு பெப்சிஸ் என்ற அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாலும், அவரது உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் பரவின. மேலும் நேற்று சரத்பாபு இறந்து விட்டதாக ஒரு வதந்தி பரவி சமூக வலைதளங்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மூத்த நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சரத்பாபுவின் உடல்நிலை சில நாட்களாகவே அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் , மேல் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து, அவர் ஏப்ரல் 20 ஆம் தேதி ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் அவரி்ன் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சரத் ​​பாபுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், பல உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம் சிகிச்சை தொடர்வதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். சரத் பாபுவின் உடல்நிலை குறித்து சரியான தெளிவு இல்லாததால், வதந்திகள் பரவி வருகின்றன என ஏஐஜி மருத்துவர்கள் சமீபத்தில் சரத்பாபு ஹெல்த் புல்லட்டின் வெளியிட்டனர்.

பெங்களூரு ஏஐஜி மருத்துவமனைகளின் மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதில் சரத்பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சரத் ​​பாபுவின் உடல்நிலை குறித்த எந்த தகவலையும் அவரது குடும்பத்தினர் அல்லது ஏஐஜி மருத்துவமனைகளில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது .

சரத்பாபு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர கலைஞராகவும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 1973ல் நடிகரான இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதல்முறையாக நடித்தது ‘ராமராஜ்யம்’ படமாகும்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்பாபு . ஆறடி உயரம், ஆப்பிள் நிறம், சிகை அலங்காரம், முத்து முத்தான சிரிப்பு... 80, 90களின் அழகான ஹீரோ . கதாநாயகனாக இருந்தும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக ஜொலிக்க முடியவில்லை . அதனால் பல படங்களில் துணை நடிகராக நடித்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தார்.

Tags:    

Similar News