நடிகர் கொடுக்காப்புளி செல்வராஜ் நினைவு தினம்

Update: 2021-06-12 07:44 GMT

நடிகர் கொடுக்காப்புளி செல்வராஜ் நினைவு தினம் ஜுன் 12, 2014,

கொடுக்காப்புளி செல்வராஜ் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். ௩௦௦ க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். மேடை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கொடுக்காப்புளி செல்வராஜின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் , உடன்குடி ஆகும். இவர் 'அண்ணா நகர் முதல் தெரு', 'பாட்டி சொல்லை தட்டாதே', 'நானே ராஜா நானே மந்திரி', 'அரண்மனைக்கிளி', 'உதயகீதம்', 'என்னைப்பார் யோகம் வரும்' உள்பட 300 படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

சென்னை அருகேயுள்ள மாங்காடு பகுதியில் வசித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர், துணை நடிகர் ஏஜெண்டுகளின் தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த 2014 ம் ஆண்டு ஜுன் 12 ம் தேதி மறைந்தார். அப்போது அவருக்கு வயது 56 இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

Similar News