என்ன ஆனாலும் சரி.. 4 மணி காட்சி உறுதி..! தயாரிப்பாளர் என்ன சொல்றாரு தெரியுமா?

லியோ படம் தமிழகத்தில் எத்தனை மணி முதல் திரையிடப்படும் என்பது இப்போதும் குழப்பமாக இருக்கிறது.

Update: 2023-10-12 13:30 GMT

லியோ படத்தின் தயாரிப்பாளர் 4 மணி ஷோ உறுதி என்று பேசியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அரசு அனுமதி கொடுத்துவிட்டது இதனால் யாரும் கேள்வி கேட்க முடியாது என விநியோகஸ்தர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்கு பிறகு தளபதி விஜய்யும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, நண்பராக கௌதம் மேனன், அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, வில்லன்களாக மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஷூட்டிங், டப்பிங் ஓவர்

படம் சென்னை, காஷ்மீர், கொடைக்கானல் என 3 இடங்களில் கிட்டத்தட்ட 90 நாட்கள் முழுமையாக ஷூட்டிங் நிறைவு பெற்று, டப்பிங் பணிகளையும் முடித்துக் கொண்டு தற்போது கடைசி கட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு.

படத்திலிருந்து நா ரெடிதான் வரவா, பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம் என்று 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இன்னும் 2 பாடல்கள் படத்திலேயே வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத் தனது குரலில் பாடல்களைப் பாடி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

தொடரும் எதிர்ப்புகள்

ஆரம்பத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்காக பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். இந்நிலையில் டிரைலரில் விஜய்யை கெட்ட வார்த்தைபேச வைத்துவிட்டார் லோகி என அவரையும் எதிர்க்க ஒரு கட்டத்தில் அதை மியூட் செய்து வெளியிட்டுள்ளனர். இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் வெளியாக சரியாக 1 வாரம் இருக்கிறது என்று நினைக்கும்போது, 4 மணி காட்சிகள் மட்டுமின்றி, 7 மணி, 9 மணி காட்சிகளும் இல்லாமல் 11 மணிக்குதான் முதல் காட்சி திரையிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இருப்பதாக தகவல் கிளம்ப, விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் அரசு தரப்பிலிருந்து வந்த அறிவிப்பில் படக்குழுவிடமிருந்து கேட்கப்பட்ட அனுமதி கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், படத்தை 4, 7 மணிக்கு திரையிட அனுமதி அளிப்பதாக அந்த உத்தரவு கூற, விஜய் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

திடீரென வெடித்த குண்டு

இதனையடுத்து ஒரு குண்டைத் தூக்கி போட்டனர். அதாவது முதல் காட்சி என்பது 4 மணிக்குதான் அல்லது 7 மணிக்கு தான் என்பதை குறிப்பிடாமல் அந்த உத்தரவு வந்திருப்பதை எடுத்துக் காட்டி, அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்பதற்கே அனுமதி என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் லலித், என்ன ஆனாலும் சரி படத்தை 4 மணிக்கு திரையிடுவோம் என விநியோகஸ்தர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி வருகிறார் என்று சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். 

அரசு சொன்ன செய்தி

பொதுவாக திரையரங்குகளில் மொத்தம் 4 காட்சிகள் ஒரு நாளைக்கு திரையிடப்படும். இது தமிழக அரசு வழக்கமான அனுமதி வழங்கப்பட்ட நடைமுறை. தீபாவளி, பொங்கல் விழா நாட்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மட்டும் அவ்வப்போது சலுகைகள் வழங்கி கூடுதலாக 1 காட்சியோ, 2 காட்சிகளோ திரையிட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோன்ற ஒரு அனுமதிதான் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.  

Tags:    

Similar News