நயன்- விக்கி ஜோடிக்கு வக்காலத்து வாங்கிய வனிதா விஜயகுமார்

Latest News About Vanitha Vijayakumar- வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், நயன்- விக்கி ஜோடிக்கு, ஆதரவாக களம் இறங்கி, வெளுத்தி வாங்கியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

Update: 2022-10-12 08:11 GMT

latest news about vanitha vijayakumar - வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரத்தில், நயன்-விக்கி ஜோடிக்கு, நடிகை வனிதா விஜயகுமார் ஆதரவு.

Latest News About Vanitha Vijayakumar-நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த விவாதங்களும், விமர்சனங்களும்  அதிகரித்து வருகிறது. பலர் இதுகுறித்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், வனிதா விஜயகுமார் நயன் - விக்கிக்கு ஆதரவாக 'ட்விட்' செய்து விமர்சனம் செய்தவர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.


மிகவும் பரபரப்பாக பேசப்படும் சூடான விஷயங்களில், 'வான்டடு'வாக வந்து கருத்து கூறும் சில சினிமா பிரபலங்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். ஆனால் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய மனதில் பட்டத்தை, 'பளிச்' என கூறி விடுவார். இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் அதைப் பற்றியும் கவலைப்படாதவர். 'ரிஸ்க்' எடுப்பது எனக்கு 'ரஸ்க்' சாப்பிடற மாதிரி என்ற நடிகர் வடிவேலுவின் 'பஞ்ச்' டயலாக், இவருக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில், எந்த பிரச்னை என்றாலும், அதில் தனது கருத்தை, விளக்கத்தை முன்வைக்காமல் வனிதா விஜயகுமாரால் இருக்கவே முடியாது.

அந்த வகையில், தற்போது ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியிலும், மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும்... திருமணமான நான்கே மாதத்தில், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்று கொண்டதாக கூறப்படும் விவகாரம்தான்.

இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. மீறி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் குழந்தை பெற்று கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக, திருமணம் ஆகி 5 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பது அவசியம், இதனால் நயன் மற்றும் விக்கி இருவரும், விதிமுறைகளை மீறினார்களா? என்கிற சர்ச்சை ஒருபக்கம் எழுந்துள்ளது.

இப்படி பல்வேறு விஷயங்கள் விவாதத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், இது குறித்து விமர்சிப்பவர்களுக்கு நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் வெளுத்து வாங்கியுள்ளார். 'முட்டாள்கள் சொல்வதைப் பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம், வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்,' என தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


மேலும் வாடகைத்தாய் குறித்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'எங்களுக்கும் லீகல் தெரியும், எங்களுக்கும் மெடிக்கல் தெரியும் என்று சில முட்டாள்கள் நேரத்தை வீணாக்கி வருகிறீர்கள், ஆனால் நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்' என்று நயன் - விக்கி ஜோடிக்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வாடகைத்தாய் குறித்த விதிகளை முழுமையாக அறிந்து கொள்ளாமலா நயன்தாரா- விக்னேஷ் தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றிருப்பார்கள் என வனிதா விஜயகுமாரின் பதிவை பலரும், வரவேற்று வருகிறார்கள்.  நயன்-விக்கி ஜோடிக்கு சர்ச்சை என்பது, அவர்கள் காதலித்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. திருமணம், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை என சர்ச்சைகளும், விமர்சனங்களும், அவர்களது நிழல் போலவே கூடவே பயணிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News