ராஜியுடன் மீண்டும் மோதும் கயல்..! என்ன ஆகப்போதோ?

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

Update: 2024-07-17 14:15 GMT

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

Full View

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.  வாட்ஸ்அப்பில் இணைய 

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update

அவசர அவசரமாக ஆட்டோவில் அன்பு மருத்துவமனைக்கு ஆட்டோவில் வருகிறான். பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்க வருகிறான். அங்கு கயல் அன்புவைப் பார்த்து யாரு இவரு என்ன ஆச்சி என கேட்க, நடந்ததை விவரிக்கிறான். சாலை விபத்தில் அடி பட்ட அவருக்கு மருத்துவ உதவி செய்ய கயல் மற்றவர்களை அழைக்கிறார். அவளது மனைவி குழந்தையுடன் பதறியடித்துக்கொண்டு ஓடி வருகிறாள்.

மருத்துவரின் உதவியுடன் கயலும் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறாள். பதறிய மனைவியை சமாதானம் செய்கிறான் அன்பு. காலில் பயங்கர அடி என சொல்கிறாள் கயல். இதை கேட்டு பாதிக்கப்பட்டவரின் மனைவி அழுகிறாள். அக்கா அழாதீங்கக்கா பாப்பா பயந்துட போறா என சொல்கிறாள் கயல்.

கல்லு மண்ணு சுமந்து பாடுபட்ட என் குடும்பத்த காப்பாத்திட்டு இருந்தவரு என் புருசன். எங்களுக்கு வசதியும் இல்ல காசும் இல்ல. அவர விட்டா நாதி இல்ல என மனைவி தெரிவிக்கிறாள்.

கயல் அந்த கார் நம்பரை பார்த்தீயா யாருடைய கார் என கயல் கேட்க, அதை சொல்ல அன்பு தயங்குகிறான். காரணம் என்ன என்று கேட்க, கயலைத் தனியாக வரச் சொல்லுகிறான். அப்போது அவன் கயலிடம் இந்த விபத்தை செய்தது வேறு யாருமில்லை ராஜலட்சுமி அத்தையின் மகன்தான் என சொல்ல கயலுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. அவன் நம்பரை வாங்கி அவனுக்கு கால் செய்வதாக சொல்கிறாள். அல்லது போலீஸில் புகார் கொடுக்கலாம் என்கிறாள் கயல்.

ராஜியின் மகன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து பெட்டில் விழுந்துவிடுகிறான். அந்த நேரத்தில் கயல் அவனுக்கு கால் செய்கிறாள். கயல் என்பது தெரிந்ததும் அவன் கட் செய்கிறான். மீண்டும் அழைக்கிறாள் கயல்.

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பித்து ஓடியதை கண்டித்து, அவனுக்கு கால் செய்தால் அவன் திமிருத்தனமாக பேசுகிறான். இதனால் கயலுக்கு கோபம் அத்துமீறுகிறது. இதனால் கயல் கொதிக்கிறாள். பணக்கார திமிரைக் காண்பிக்கிறான் அவன். இதனால் கயல் அவனுக்கு தக்க பாடம் கற்பித்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்கிறாள்.

அவனுக்கு நேரம் சரியில்லை போல. பாவம்னு பாத்தா என் ஃபோனையே கட் பண்றான். தப்ப ஒத்துக்கிட்டா கூட மன்னிக்கலாம். திமிரா பேசுறவன மன்னிக்கவே கூடாது. இது மாதிரி ஆளுங்கள பாக்கும்போதுதான் பணத்து மேலையே வெறுப்பு வருது. யாரோ எவரோ நமக்கு எவ்வளவு வருத்தம் வருது. ஆனா ஒரு விபத்த பண்ணிட்டு இப்படி பண்ணிட்டு இருக்கான். இந்த அக்காவையும் குழந்தையையும் பாக்கும்போது கவலையா இருக்கு.

அப்போது மருத்துவர் அங்கே வருகிறார். கயல் அவரோட எக்ஸ்ரே ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன். பிளேட் வச்சாலுமே அடுத்த 6 மாசம் ஆகும் அப்போதுதான் அவரால நடக்கமுடியும். குறஞ்சது 2 மாசமாச்சும் ஆகும் என கைவிரிக்கிறார் மருத்துவர். கயல் மருத்துவரிடம் அந்த நபருக்கும் மனைவி குழந்தைக்கும் பரிவு பார்க்கிறாள் கயல். ஆனால் மருத்துவர் தானும் இங்கு எம்ப்ளாய்தானே என்னால் என்ன செய்துவிட முடியும் என்று கூறுகிறார். அப்போது என்னால் முடிந்தால் நான் கொடுத்திருப்பேன் என்று சொல்கிறாள் கயல்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

அப்போது உடனிருக்கும் நர்ஸ் ஒருத்தி கயலை வம்புக்கு இழுக்கிறாள். அப்போது என்னால் முடிந்தால் நான் கொடுத்திருப்பேன் என்று சொல்கிறாள் கயல். மருத்தவரிடம் ரெக்யூஸ்ட் செய்ய கேட்கிறாள் கயல். டீன் வேற ஊருக்கு கிளம்பிவிட்டார். இவர்களை உடனே பணம் கட்ட சொல்லுங்க என்று கூறிவிட்டு சென்று விடுகிறார் டாக்டர். அந்த நேரத்தில் கயல் அவர்களை தேற்றுகிறாள். இப்ப என்னக்கா பண்ணுறது என அன்பு கேட்க, அதற்கு கயல் நாம யோசிக்கலாம் என்கிறாள்.

இப்படிஇவங்கள கதற விட்டுட்டியே மனோஜ் உன்ன என்ன பண்ணலாம் என கயல் யோசிக்க, அந்த நேரத்தில் ராஜி வீட்டில் அவளது தங்கை மொபைல் நோண்டிக்கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் அங்கு கயல் வந்து சேருகிறார். வந்ததும் மனோஜை அழைக்கிறாள். சத்தமாக கூப்பிட்டுக்கொண்டே வரும் கயலைத் தடுக்கின்றனர் அனைவரும்.

கயல் மனோஜை உடனே வரச் சொல்லி அழைக்கிறாள். அவன் என்ன பண்ணான் அவன ஏன் கூப்பிடுற என ராஜி கேட்க, நடந்ததை சொல்கிறாள் கயல். அந்த மனுசனோட உழைப்பை நம்பிதான் அந்த குடும்பமே இருக்கு. அவருடைய குழந்தை என்ன பண்ணும் அந்த குழந்தையோட எதிர்காலம் என்ன ஆகும் என்று கயல் ஆத்திரப்படுகிறாள். 

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

அவரு வேலைக்கு போனாதான் அந்த வீட்டுல மூனு வேள சாப்பாடு நடக்கும். இதுக்கு ஏன் வீண் பழி போடுற என ராஜி சொல்கிறாள். உன் குடும்பத்துல உன்ன விட யாரும் மேல வரக்கூடாது. அப்படி இருந்தா நீ எதாவது பண்ணி கீழ தள்ளி விட்ருவ என ராஜி பேச,அதற்கு கயல் தக்க பதிலடி கொடுக்கிறாள்.

விபத்து ஏற்படுத்திவிட்டு, ஒருத்தரோட வாழ்க்கைல விளாயாடிருக்கான் என சொல்கிறாள் கயல். மனோஜ் ரொம்ப தப்பா இருக்கான். அவன் சரியில்ல. அடிபட்டவர ஆஸ்பிட்டல் கூட்டி போக கூப்பிட்டா அவன் கிளம்பி போயிட்டான் என சொல்கிறாள் கயல். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. இதனால் மனோஜை அவன் அப்பா அழைக்கிறார்.

மனோஜும் கீழே இறங்கி வருகிறான். அவனிடம் நீ குடிச்சிருக்கியா என கேட்கிறாள் ராஜி. கயலைப் பார்த்தும் நீ ஏன் இங்க வந்த முதல்ல வீட்ட விட்டு வெளிய போ என்கிறான் மனோஜ். நீ குடிச்சிருக்கியா என கேட்க ராஜியிடம் உண்மையைச் சொல்கிறான் மனோஜ் ஓங்கி ஒன்னு வைக்கிறாள் ராஜி. 

கயல் சீரியல் நேற்றைய எபிசோட் | Kayal serial Yesterday episode 

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Tags:    

Similar News