மாட்டிக்கொண்ட கயல்..! அதிர்ச்சி முடிவெடுத்த எழில்! அடுத்து என்ன?

தீபிகாவுடன் பேசிக் கொண்டிருக்கும் கயலை, எழில் கையும் களவுமாக பிடித்தாரா இல்லையா என்பதே இன்றைய எபிசோட்.

Update: 2024-07-09 11:33 GMT

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

Full View

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள். வாட்ஸ்அப்பில் இணைய

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update

அம்மா : அன்பு ஷாலினிய நீ ஏறெடுத்து கூட பாக்கமாட்டேனு அம்மா மேல சத்தியம் பண்ணுப்பா. யோசிக்காம சத்தியம் பண்ணு அன்பு

மூர்த்தி : டேய் அன்பு சத்தியம் பண்ணுடா. தேவையில்லாத பேச்சல்லாம் கேக்க வேணாம்டா. பண்ணு சத்தியம்

அம்மா : நீ இப்ப பண்ணப்போறியா இல்லையா

அன்பு, தன் அம்மா மீது தலையில் கைவைத்து சத்தியம் செய்கிறான்.

வேதவல்லி - இதோ பாருப்பா நீ இந்த சத்தியத்த மதிப்பீங்கன்னு நினைக்கிறேன். இத பெருசா எடுத்துக்காம சத்தியம் தான இந்த காலத்துல யாரு மதிக்குறான்னு நீ மீறுனனு வையி, நா உன்ன சும்மா விடமாட்டேன்

கயல் - என்ன பண்ணுவீங்க.. அப்படி என்ன பண்ணிடுவீங்க

கயல் - ஏன் விக்னேஷ் நீங்களும் தேவியும் காதலிச்சிதான கல்யாணம் பண்ணீங்க. உங்களுக்கு இப்படி ஒரு முட்டுக்கட்டை போட்டா என்ன பண்ணிருப்பீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், உங்க தங்கச்சிக்கு ஒரு நியாயமா? முதல்ல ஒருத்தர காதலிச்சிட்டு அவங்கள மனசுல வச்சிட்டு இன்னொருத்தர கல்யாணம் பண்ணிட்டு அவர் கூட வாழ்றது எப்படி ஒரு கஷ்டமான விசயம்.

நானும் எழிலும் காதலிக்குறோம். நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு. அதனால எல்லாம் முடிஞ்சிட்டதா அர்த்தம் இல்ல. எங்களுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் எதுவுமே உறுதியில்ல. என்னவேணா நடக்கலாம். கல்யாணம் நடக்கலனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல. எதுவா இருந்தாலும் அத ஏத்துக்கிட்டு மனச தேத்திக்கிட்டு வாழ கத்துக்கணும்.

மேடம் அதான் என் தம்பி வாக்குறுதி கொடுத்துட்டான்ல. எது நடக்குமோ அது நடக்கும். என் தம்பிய அப்படி நட இப்படி நடனு சொல்றதுக்கு நீங்க ஒன்னும் கடவுள் இல்ல. என்ன வேணா நடக்கலாம் நீங்க வீட்டுக்கு போங்க.

ஷாலினியும் விக்னேஷும் வேதவல்லியும் வீட்டுக்கு கிளம்பி செல்கிறார்கள்.

கயல் வீட்டில் அனைவருக்கும் மனம் சஞ்சலமாக இருக்கிறது. கயல் ஏன் இப்படி பேசினாள் என வருத்தப்படுகிறாள் அம்மா. அன்பு அழுகிறான். அவனிடம் சென்று கயல், உன் வலியை என்னால் புரிஞ்சிக்க முடியுது.இது சூழ்நிலை. நீ ஷாலினிய இவ்ளோ தூரம் காதலிக்கிறனு எனக்கு இன்னைக்குதான்டா புரிஞ்சிது. அக்கா நான் இருக்கேன்ல நீ ஆசப்பட்டத நா நிச்சயமா நிறைவேத்தி வைக்குறேன். அவள உன் கூட சேத்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.

அம்மா மேல சத்தியம் பண்ணிட்டோமே எப்படி சாத்தியம்னு யோசிக்கிறயா. அம்மாவே உன்கிட்ட வந்து ஷாலினிய கட்டிக்கோனு சொல்வாங்க. நீ நினச்சது எல்லாம் நினச்சபடி நடக்கணும்னா நீ உண்டு உன் டிரெய்னிங் உண்டுனு உன் வேலைய பாரு. நானே வேதவல்லி மேடம்கிட்ட பேசி உனக்கும் ஷாலினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்குறேன். எத நினச்சும் ஃபீல் பண்ணாத என்கிறாள் கயல்.

தீபிகா, கயலுக்கு ஃபோன் செய்து வெளியில் வரச் சொல்லி அழைக்கிறாள்.

தீபிகா - ஹலோ ஹாய் கயல் நான் தீபிகா பேசுறேன். உங்க ஃபிரண்டு எழில கட்டிக்கப்போற பொண்ணு. சிவசங்கரி ஆண்ட்டி கூட அறிமுகப்படுத்துனாங்களே.

இதோ பாருங்க நா உங்கள எதிரியா பாக்கல. பிரண்ட்டாதான் பாக்குறேன். அதனாலதான் என்ன பத்தி நீங்க முழுசா புரிஞ்சிக்கணும் என் கேரக்டர தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு உதவி பண்ணனும். நீங்க கண்டிப்பா பண்ணுவீங்கன்னு நினைக்குறேன்.

எழில் கிட்ட நா பேசணது இல்ல. அவருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சிக்க விரும்புறேன். அதான் அவர பத்தி முழுசா தெரிஞ்சிக்க ஆசப்படுறேன். நீங்க நினச்சா அத செய்ய முடியும். நாம மீட் பண்ணலாமா கயல் என்று சொல்கிறார்.

அப்போது தங்கை ஆனந்தி வந்து எழில் மாமா உனக்கு கால் பண்ணிக்கொண்டு இருக்கிறார் அவரை அழைத்து பேசு என்கிறாள்.

தீபிகாவோ கயலிடம் உங்களுக்கு வர விருப்பம் இல்லைனா விடுங்க என்கிறாள். அதற்கு கயல் நான் வருகிறேன் என்று தெரிவிக்கிறாள். லொகேஷன் அனுப்புகிறேன் வாருங்கள் என்கிறார். அந்த நேரத்தில் எழிலுக்கு கால் செய்து பேசுகிறாள்.

யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய் கயல் என்று எழில் கேட்கிறான். என்ன விசயம் ஏதாச்சும் முக்கியமான விசயமா பேசணுமா என்று கேட்கிறாள் கயல். எழில் தன்னை காஃபி ஷாப் ஒன்றுக்கு வரச் சொன்னாலும் நான் வரவில்லை என்று சொல்லி தட்டிக்கழிக்கிறாள். எழிலும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடைபெறுகிறான்.

எழில் தனது அப்பாவுடன் அந்த காஃபி ஷாப்புக்கு செல்கிறான். 

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

அடுத்ததாக கயல் அவளது தோழிக்கு கால் செய்து பேசுகிறாள். எழில் கால்ல ஒரு முள்ளு குத்துனா கூட என்னாத தாங்கிக்க முடியாது. அவன் நல்லா வாழணும் அதனாலதான் அவனுக்காக என் காதல தியாகம் பண்றேன். தீபிகா அவள நல்லா பாத்துப்பா என்று சொல்ல, அடுத்து கோபப்படுகிறாள் தோழி.

ஒரு கட்டத்துல எழில் உன்ன விட்டு விலகுறப்ப, உனக்கு எவ்ளோ வலி வந்துது. அந்த வலிய நீ உணர்ந்துமே அத எழிலுக்கு குடுக்க நினைக்குறியா போயி எழில்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லு என்கிறாள்.

எழில் நல்லா இருக்கணும் என் சந்தோஷத்துக்காக அவன நானே கொன்னுடக்கூடாது என்கிறாள் கயல்.

ரெஸ்ட்டாரெண்டில் தீபிகா கயலுக்காக காத்திருக்கிறாள். 

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

கயலுக்கும் சேர்த்து காஃபி ஆர்டர் செய்கிறாள் தீபிகா. எனக்கு எழில பத்தி எல்லாமே தெரிஞ்சிக்கணும்னு சொல்றா தீபிகா. அப்போது கயல் என் எழில் என்று ஆரம்பிக்கிறாள். அதற்கு தீபிகா அப்படி பேசாதீங்க எனக்கு ஹர்ட் ஆகுது என்பது போல சொல்லிவிட்டு நான்தான் எழில கல்யாணம் பண்ணிக்கப் போறேன் என்று கூறுகிறாள்.

எழிலின் அருமை பெருமைகளைக் கூறுகிறாள் கயல். நல்லவன் வல்லவன், அவனுக்கு என்ன பிடிக்கும், அவனது குணம் என தொடங்கி பல விசயங்களை பகிர்ந்துகொள்கிறாள்.

என்ன இதுவரைக்கும் அவன் கண்கலங்க விட்டதில்ல, அவனோட தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் ஜெயிக்க வைக்கும் என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, அங்கு எழில் தனது ஜீப்பில் வருகிறான்.

கயலோட ஸ்கூட்டி இங்க நிக்கிது என பார்த்து எழில் தன் அப்பாவிடம் சொல்கிறான். ஆமா ஹாஸ்பிட்டல்ல ஏதோ முக்கியமான வேலைனு இங்க என்ன பண்றா. அப்பா நீங்க இருங்க நான் என்னனு பாத்துட்டு வந்துடுறேன் என்று உள்ளே செல்கிறான்.

கயல் சீரியல் நேற்றைய எபிசோட் | Kayal serial Yesterday episode

எழில் மனச விடவா உனக்கு ஜாதகத்துல இருக்குற கட்டம் முக்கியம். எழில் இல்லாத வாழ்க்கைய உன்னால நினச்சி பாக்க முடியுமா? எழில் இல்லாமத்தான் உன்னால வாழ்ந்துட முடியுமா? ஜாதகம் பாத்து கல்யாணம் பண்ணவங்களே பாதில பிரிஞ்சிடுறாங்க. மனப்பொருத்தம்தான் முக்கியம். இதெல்லாம் போட்டு குழப்பிக்காம நீ ஒழுங்கா எழில கல்யாணம் பண்ணிக்கோ.

எழில் அம்மாவுக்கும் கல்யாணத்துல விருப்பம் இல்ல. அவங்களுக்கு என்ன எழிலுக்கு கல்யாணம் பண்ணி வைக்க விருப்பமே இல்ல. எங்களுக்குள்ள நடந்த கசப்பான சம்பவங்கள அவங்க மறக்கவே இல்ல. என்ன அவங்களுக்கு எப்பவுமே பிடிக்கல. பிடிக்காது. எழிலுக்கு தீபிகானு ஒருத்திய கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போடுறாஹ்க. அவங்களுக்கும் இந்த ஜாதகம் பற்றி தெரிஞ்சிருக்கு.

எழில் கூட சேர்ந்து வாழ பாக்கியம் எனக்கு இல்ல. எழில் என் கூட இருக்கணும்ன்றதவிட எனக்கு அவன் உயிரோட இருக்கணும். அவன் சந்தோஷமாக வாழணும் என்று சொல்கிறாள் கயல்.

காதலுக்கு எப்படி சாதி மதம் முக்கியம் இல்லையோ அதுபோல ஜாதகமும் முக்கியம் இல்ல. எழில் நீ இல்லாம சந்தோஷமா இருப்பாரா. ஜாதகத்த பாத்து லவ்வ மறக்குற, அப்ப உனக்கு அவர் மேல காதல் இல்லையா. இது போட்டுக்குடுக்குற விசயம் இல்ல. எழில் அம்மாவ பத்தி எழில் கிட்ட சொல்லு. உன் வாழ்க்கைய காப்பாத்திக்க.

நீயும் எழிலும் சேரப்போறீங்கன்னு உங்கள விட நிறைய பேரு எதிர்பார்த்து காத்திருக்கோம். நீ போயி உடனே எழில் கிட்ட பேசு என்கிறார் தோழி. ஆனால் யாருக்கும் இதை சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்குகிறாள் கயல். தோழியும் சத்தியம் பண்ணிவிடுகிறாள்.

ஆனால் நீ இப்ப எனக்கு ஒரு சத்தியம் பண்ணி குடு என்று கேட்கிறாள். நீ எழில விட்டு பிரிய மாட்டேன்னு சத்தியம் பண்ணு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழ்வீங்கனு சத்தியம் பண்ணு. ஏற்கனவே பல வருசமா அவரோட காதல ஏத்துக்காம அலைய விட்டு அவர நோகடிச்ச. இப்ப ஆசைய காமிச்சிட்டு நீ அவர ஏமாத்திடாத. அவரால அத தாங்கிக்கவே முடியாது என்று தோழி சொல்ல, சத்தியம் செய்யாமலேயே கயல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விடுகிறாள்.

கயல் வீட்டுக்கு வந்து சேரவும், கயல் அம்மா கயலிடம் நலம் விசாரிக்கிறார். ஏன் ஒருமாதிரியா இருக்கே. எதையோ என்கிட்ட இருந்து மறைக்குற என்ன ஆச்சுன்னு சொல்லு என அவளது அம்மா கேட்கிறார்.

கயலை ரெஸ்ட் எடுக்க சொல்லி, அண்ணி காபி போடட்டுமா என கேட்க அந்த நேரம் பார்த்து ஷாலினி, விக்னேஷ், வேதவல்லி மூவரும் கயல் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை கயல் அம்மா வரவேற்று உட்காரச் சொல்லுகிறார்.

மாப்பிள்ள ஏதாவது பிரச்னையா என விக்னேஷைப் பார்த்து மூர்த்தி கேட்கிறார். அப்போது விக்னேஷ் பேச ஆரம்பிக்கிறார். எதுவோ இருந்தாலும் ஓபனா பேசுங்க என்று கயலும், கயல் அம்மாவும் பேசுகிறார்.

அத்த என் அம்மா பண்ணது மிகப்பெரிய தப்புதான். அத எந்த காலத்துலயும் நான் மறுக்கமாட்டேன். ஒரு இடத்துல உங்க பொண்ண கட்டி குடுத்துட்டு அங்க நல்லா வாழணும்னு நீங்க யோசிச்சா, அன்பு ஷாலினிக்கூட நெருங்கி பழகக்கூடாது. சொந்தத்துல வரண் பாத்து ஷாலிய கட்டி வைக்க எங்கம்மா ஆசப்பட்டுட்டு இருக்காங்க.

எங்க அம்மா ஒரு விசயத்த முடிவு பண்ணிட்டா அதுல இருந்து மாறவே மாட்டாங்க.

நானும் தேவிய காதலிச்சி கல்யாணம் பண்ணிட்டேன். ஷாலினியவாச்சும் சொந்தத்துல கல்யாணம் பண்ணி குடுக்கணும்னு நினைக்குறது தப்பில்லையே. இது இவங்க பழக்கவழக்கத்தால பிரச்னையாகும்னு நிலை வரப்ப கண்டிச்சுதான ஆகணும்.

எனக்கு தேவிய எவ்வளவு பிடிக்குமோ உங்க குடும்பத்த அவ்ளோ பிடிக்கும். இதனால எந்த பிரச்னையும் வரக்கூடாதுனு நினைக்குறேன். சுத்தி வளச்சி பேச விரும்பல. அன்பு ஷாலினிய மறந்துடுங்க. ஷாலினிக்கு நான் பேசி புரிய வச்சிட்டேன். நீங்க புரிஞ்சிக்கோங்க. எப்ப யாருக்குள்ள பிரச்னை வருமோன்னு பயமா இருக்கு. நீங்க புரிஞ்சி நடந்துப்பீங்கனு நம்புறேன். நீங்க போலீஸ் ஆகி உங்க ரேஞ்சுக்கு ஏத்தமாதிரி பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க அக்கா வாழ்க்கை நல்லா இருக்கணும்ல என்று பேசுகிறான் விக்னேஷ்.

ஷாலினியிடம் இருந்த அன்பு கொடுத்த கிப்ட்களை திருப்பி கொடுத்துவிட்டு, அன்புவுக்கு ஷாலினி கொடுத்த கிப்டுகளை திருப்பி கொடுக்க சொல்கிறான் விக்னேஷ். இதையே அன்புவின் அம்மாவும் சொல்கிறாள். எல்லாத்தையும் எடுத்து ஒரு கவரில் போடச் சொல்லி அதை திருப்பி கொடுக்க வைக்கிறாள்.

அண்ணி தயவுசெஞ்சி என்ன தப்பா எடுத்துக்காதீங்க. இத இப்படி டீல் பண்ணி பேசி முடிச்சிக்கிட்டாதான் இனி யாருக்கும் எந்த பிரச்னையும் வராது. அம்மா அத்தைக்கிட்ட மன்னிப்பு கேளுங்க என்கிறான் விக்னேஷ்.

வேதவல்லியும் கயல் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். உங்க புள்ளைய என் மகள மறக்க சொல்லுங்க. இவ்வளவு நடந்தப்பறம் ஷாலினி ஏதாவது பண்ணிப்பாளோ என்று பயமா இருக்கு. இந்த காதல் கண்றாவியெல்லாம் ஏன் இவங்களுக்கு வருதோ தெரியல. இவ்ளோ பிரச்னகள் நடக்குதே இத விட்டுத்தொலையலாம்னு விடலாம்ல. சமூகத்துல எவ்ளோ மதிப்பு வாய்ந்து இருந்தேன். என்னய போயி விஷத்த கலக்குற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டாங்க. ஷாலினிய அவ்ளோ அன்பா வளத்தேன். அவளுக்கும் அம்மான்னா அவ்ளோ புடிக்கும்.

உங்க பையனால அவ மாறிட்டா. நல்லா வளந்த பொண்ண இப்படி மாத்திட்டானே. இப்பக்கூட உங்க பையன் மேல எனக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லை என்கிறாள் வேதவல்லி. அன்பு ஷாலினிய நீ ஏறெடுத்தும் பாக்க மாட்டனு அம்மா மேல சத்தியம் பண்ணுடா என சொல்கிறார். 

Tags:    

Similar News