கேப்டன் மில்லர் படத்திற்கு கேரளாவில் பலத்த மழையால் வந்த சோதனை

Captain Miller Movie Dhanush -கேப்டன் மில்லர் படத்திற்கு கேரளாவில் பலத்த மழையால் கடும் சோதனை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-27 07:24 GMT
நடிகர் தனுஷ் படத்துடன் கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர் 

Captain Miller Movie Dhanush -தமிழ் திரையுலகில் தற்போது மன்னர்கள் கால வரலாறு, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலை, அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் ஆகியவற்றை கதைக்களமாக கொண்டு படங்கள் தயாரிப்பது வழக்கமாக மாறி வருகிறது. சோழ மன்னர்கள் காலத்தை அடிப்படையாகக் கொண்ட பொன்னியின் செல்வன் படம் தற்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.


captain miller movie dhanush, captain miller movie dhanush budgetஅந்த வகையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கேப்டன் மில்லர் என்ற படத்தை தயாரித்து வருகிறது.இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படமும் மற்றும் வாத்தி என்ற படத்தின் படப்பிடிப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. கேப்டன் மில்லர் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

captain miller movie dhanush, captain miller movie dhanush budgetகேப்டன் மில்லர் படம் தொடர்பான காட்சிகள் குறிப்பாக சண்டை காட்சிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் எடுக்கப்பட்டிருந்தது. கேரளாவில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வனப் captain miller movie dhanush, captain miller movie dhanush budgetபகுதிகளில் சூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு பிரம்மாண்டமாக செட் போட்டு படப்பிடிப்பு நடத்த எண்ணிய நிலையில் தொடர்ந்து கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பட குழுவினர் ஷூட்டிங்கை தள்ளி போட திட்டமிட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அதிக அளவில் பெய்யும் என்பதால் 90 நாட்கள் சூட்டிங்கை தள்ளி வைத்துள்ளனர்.

captain miller movie dhanush, captain miller movie dhanush budgetஇதனால் தனுஷின் கால்ஷீட்கள் வீணாவதால் அவர் தரப்பிலிருந்து தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.மேலும் இந்த படப்பிடிப்பின் போது அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வகைப்படுத்தப்பட உள்ளதால் அவை தற்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தயார் பண்ணிய அனைத்துமே தற்போது வீணாகியுள்ளது. இதனால் கேப்டன் மில்லர் பட தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய்கள் நஷ்டம் ஆகி உள்ளதாம் .ஆனால் படத்தின் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம் ஆகியவை தற்போது ரூ. 120 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. எனவே மீண்டும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News