சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் எஸ்.டி.சுந்தரம் பிறந்த நாள்

தமிழ் எழுத்தாளர்,நாடகாசிரியர்,நடிகர்,கவிஞர், திரைப்படஇயக்குநர். சேலம் துரைசாமி சுந்தரம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் 1921 ம் ஆண்டு பிறந்தார்.

Update: 2021-07-22 01:24 GMT

இயக்குநர் எஸ்.டி.சுந்தரம்

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் எஸ். டி. சுந்தரம் பிறந்த நாள்

எஸ். டி. சுந்தரம் தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர். சேலம் துரைசாமி சுந்தரம் எனும் எஸ். டி. சுந்தரம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் 1921 ம் ஆண்டு ஜூலை 22 ம் தேதி பிறந்தார்.

இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், பட்டினத்தார் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா எல்லாம் இவருக்கு மனப்பாடம். தனது 12 ஆவது வயதில் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். இவருக்கிருந்த தமிழ்ப் புலமையைக் கண்ட நவாப் ராஜமாணிக்கம் இவரை 1934 ஆம் ஆண்டு திருவையாறு அரசு கலைக் கல்லூரியில் சேர்த்தார். அங்கு தமிழ் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

1942 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறைத்தண்டனை பெற்றார். தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். சிறைவாசத்திலிருந்து விடுதலையானதும் மீண்டும் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். சிறையிலிருந்த போது கவியின் கனவு என்ற நாடகத்தை எழுதியிருந்தார். இது பெரும்பாலும் நாட்டு விடுதலை பற்றிய அவரின் சொந்தக் கனவை வைத்தே எழுதப்பட்டது.

1945 ஆம் ஆண்டு குருநாதர் ஆசியுடன் இவரும் சக்தி கிருஷ்ணசாமியும் இணைந்து சக்தி நாடக சபா வைத் தொடங்கி இவரது கவியின் கனவு நாடகத்தை அரங்கேற்றினார்கள். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசன், எம். என். நம்பியார், எஸ். வி. சுப்பையா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.

கவியின் கனவு நாடகம் மிகவும் புகழ் பெற்று 1500 தடவைகளுக்கு மேல் மேடையேறியது. ஒரு தடவை நாகப்பட்டினத்தில் இந்த நாடகம் அரங்கேறியபோது கவியின் கனவு ஸ்பெஷல் என ஒரு சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து விடப்பட்டதாம்.

1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி சென்னை வானொலி விவித் பாரதியின் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிப்பதிவில் கலந்து கொண்டார். இதுவே இவரது கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி அவர் இறந்த அன்று ஒலிபரப்பானது. 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

Tags:    

Similar News