BiggBoss 7 ரெண்டாவது வூட்ல தங்கப்போவது இவுங்க்ளா? அதிரடியாக வந்த தகவல்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் இரண்டாவது வீட்டில் யார் யார் தங்க போகிறார்கள்?

Update: 2023-09-16 08:15 GMT

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தொடரின் 7வது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இம்முறை இரண்டாவது வீட்டில் தங்கப் போவது யார் ? அது என்ன மாதிரியான கான்செப்ட் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ இந்த பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு வீட்டுக்குள் பல செலிபிரிட்டிகளை அடைத்து வைத்து அவர்களின் கோபம், தாபம், மகிழ்ச்சி, துன்பம், நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் என எடுத்துரைப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம்.இதன்மூலம் சமுதாயத்திலிருக்கும் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியாக அவர்களை பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் சீசனிலிருந்தே இந்நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தில்தான் இருக்கும். தொலைக்காட்சியில் மட்டுமல்ல, ஓடிடியிலும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து வருவார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பில் கமல்ஹாசன் ரெட்டை வேடத்தில் வந்து கலக்கினார். பிக்பாஸ் புரோமோவே வேற லெவலுக்கு ரீச் ஆனது. கமல்ஹாசனின் நடிப்பு திறனை ஒரு டிவி தொடரின் விளம்பரம்தானே என அவர் நிறுத்தவில்லை.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த முறை யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த ரகசியம் மெல்ல மெல்ல கசிந்து வருகிறது.

பிக்பாஸ் ஏழாவது சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப், கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்‌ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், விஜே பார்வதி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

2வது வீட்டில் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 1 வீடுதான் இருக்கும். அதில் நடக்கும் களேபரங்களை பார்த்து ரசித்து வந்த நமக்கு இந்த முரை டபுள் ட்ரீட் என்கிறார்கள். அதாவது மொத்தம் இரண்டு வீடுகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமாம். அதாவது முதல் வீட்டில் வழக்கம்போல போட்டியாளர்கள் பங்கேற்க, இரண்டாவது வீட்டில் வேறு சிலர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது வீட்டில் இருப்பவர்கள் முந்தைய சீசன்களின் வின்னர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி முந்தைய சீசன்களில் பங்கேற்றவர்களில் பலர் இருக்கலாம் எனவும், அவர்களுக்கு பல சலுகைகளும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஓவியா, ஆரி, அசீம் உள்ளிட்டவர்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்களாம். 

Tags:    

Similar News