Ex-ம் Lover-ம் பர்த்டே Partyல்... உடையும் உண்மை!

மணி சந்திரா குறித்த உண்மை ஒன்று இந்த பிக்பாஸ் எபிசோடில் வெளியே வருகிறது.

Update: 2023-10-03 10:30 GMT

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் முதல் நாளே அதிரடியாக சில சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிக்பாஸ் சீசன் 7 முதல் வாரத்திலேயே பிரமாதமாக சண்டைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ். அதே நேரம் கலகலப்பாக செல்லும் வகையில் சில டாஸ்களுக்காக கேமைத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இப்போது துவங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல்நாளான அறிமுகநாளில் கமல்ஹாசன் அனைவரையும் உள்ளே அனுப்பி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார். இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகளை வைத்து சோதிப்பார். வழக்கமான நடைமுறை இதுவாக இருந்தாலும் இப்போது வீட்டில் நுழைந்தவுடனேயே போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

கடைசியாக வந்த விஜய் வர்மாவுக்கு இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவி கிடைத்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் வர்மாவை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த அதிரடி முடிவு முதல்நாளே பலரையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்றாலும் அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மற்ற விதிகளும் போடப்படும் என்று கூறப்படுகிறது.

  • ஐஸு
  • நிக்ஷன்
  • பவா செல்லதுரை
  • அனன்யா
  • வினுஷா
  • ரவீனா

இந்த ஆறு பேரும்தான் இன்னொரு வீட்டுக்கு அனுப்பபடுகிறார்கள். இதில் முக்கியமான ஒரு விதி என்னவென்றால் அவர்கள் 6 பேருக்கும் பிக்பாஸின் உதவி இருக்காது. அவர்களுக்கு குட்டி பாஸ் ஒருத்தர் இருக்கிறார். இதனால் என்ன நடக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஒரு வீட்டில் 6 பேர், இன்னொரு வீட்டில் 12பேர் என பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து பிக்பாஸை தொடங்கியுள்ளார் பிக்பாஸ்.

முட்டிக் கொள்ளும் விசித்ரா, பிரதீப்

இன்று வெளியான முதல் புரோமோவில் விசித்ராவும், பிரதீப்பும் முட்டிக் கொள்ளும் வகையில் சந்தர்ப்பம் ஒன்று அமைகிறது. பிக்பாஸ் போட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்படி ஸ்மால்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் மட்டும்தான் சமைக்க வேண்டும். அந்த விதியை மீறியுள்ள விசித்ரா மற்றும் யுகேந்திரனை ஸ்மால்பாஸ் வீட்டுக்கு அனுப்ப திட்டமிடுகிறார் பிக்பாஸ்.

இந்த நேரம் பார்த்து பிரதீப் அங்கிருந்து நாமினேட் ஆகாத இருவரை இந்த வீட்டுக்கு தூக்கிட்டு வாங்க என்று சொல்ல, விசித்ரா அதனைப் பிடித்துக் கொண்டு சண்டை போடுகிறார். என்ன சொல்றீங்க என்று கேட்க, நீங்க ரெண்டு பேர் அங்க போயிட்டீங்கன்னா எங்களுக்கு ரெண்டு பேர் வேணுமில்லையா என்று கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் விசித்ரா, எங்க ரெண்டு பேருக்கு நிகராக அந்த பக்கத்தில் இரண்டு பேர் இருக்காங்களா என்று கூறுகிறார். இதனால் மோதல் ஏற்படுகிறது.

கேப்டனுடன் மோதும் பிரதீப்

அடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் பிரதீப் தொடர்ந்து சண்டை போடும் வகையிலேயே பேசுகிறார். இம்முறை கேப்டனாக இருக்கும் விஜய் வர்மாவுடன் மோதும் நிலை ஏற்படுகிறது. ஆனால் அசராமல் பதிலடி கொடுக்கிறார் விஜய் வர்மா. இதில் விஜய் பக்கமே நியாயம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இதனால் பிரதீப் பார்ப்பவர்களை எல்லாம் சண்டை போடும் வகையில் இருப்பது போல புரோமோ காட்டப்பட்டுள்ளது. சப்பாத்தி கேட்டு போட்டுத் தராததால் சண்டை வருவது போல புரோமோ இருக்கிறது.

பிக்பாஸின் விளையாட்டு

பிக்பாஸின் முதல் கேம் இப்போது விளையாடப்படுகிறது. Know Your HouseMate எனும் பெயரில் இந்த டாஸ்க் நடக்கிறது. இதில் போட்டியாளர்கள் தலா ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் அவர்கள் குறித்த 6 தகவல்கள் போர்டில் எழுதப்பட்டிருக்கும். அதில் சில மட்டுமே சரியானதாக இருக்கும். அது கிசுகிசுக்கள் மட்டுமே அதை சரியாக கண்டுபிடித்து கற்பனை கலந்து கதை சொல்ல வேண்டும்.

அதன்படி மணிசந்திரா குறித்த கதையில், அவருடைய எக்ஸ் கேர்ள் ஃபிரண்டும், காதலியும் பர்த்டே பார்ட்டிக்கு வந்ததாகவும் அதன் பிறகு சில சம்பவங்கள் நடந்ததாகவும் கதை கூறுகின்றனர். செம்ம ஃபன்னாக செல்கிறது இந்த நிகழ்ச்சி. 

Tags:    

Similar News