வெளியானது 'அண்ணாத்த' 2வது பாடல்: நயன்தாராவுடன் ரஜினி டூயட்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள'அண்ணாத்த'திரைப்படத்தின் இரண்டாவது பாடல், சற்று முன் வெளியானது. சாரல் சாரல் காற்றே என்ற இப்பாடல், மெலடியாக ரசிகர்களை இதமாக வருடியுள்ளது.

Update: 2021-10-09 13:15 GMT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், 'அண்ணாத்த'. படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

அண்ணாத்த படத்தின் முதல் பாடல், சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இசை அமைப்பாளர் இமானின் இசையில், கவிஞர் விவேகாவின் வரிகளில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி .பாலசுப்பிரமணியம் ரஜினிக்காக பாடிய கடைசி பாடலான, 'அண்ணாத்த, அண்ணாத்த' என்ற பாடல், தத்துவ வரிகளுடன் ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதித்தது.

வெளியான சில மணி நேரங்களில் 'அண்ணாத்த' முதல் பாடல், யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. 5 நாட்களில், 5 மில்லியனுக்கும் அதிகமானோர், இப்பாடலை கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் 2வது பாடல், இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. சாரல் சாரல் காற்றே என்ற இப்பாடல், மெலடியாக ரசிகர்களை இதமாக வருடியுள்ளது.

வயல் வெளியில் நயன்தாராவும், ரஜினியும் பாடுவதாக, இப்பாடல் அமைந்துள்ளது. பின்னணி பாடகர்கள் சிட் ராஜ், ஷேரேயா கோஷல், இப்பாடலை பாடியுள்ளனர். வெளியான அரைமணி நேரத்திற்குள், பல ஆயிரம் பேர் இப்பாடலை கண்டுள்ளனர். இப்பாடலும் ஹிட் ஆகி இருப்பது, ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Tags:    

Similar News