Anna Serial update ரத்னாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த இளைஞர்! கோபத்தில் சண்முகம் செய்யப்போகும் சம்பவம்!

ஒவ்வொரு தங்கையாக அழைத்துச் சென்று விட்டுவிட்டு பசங்க கூட பேசக்கூடாது என்று சொல்லி அனுப்புகிறான். அந்த நேரத்தில் ரத்னாவுக்கு யாரோ ஒரு இளைஞன் லவ் லெட்டர் கொடுத்ததாக தெரியவர சண்முகம் கோபத்துடன் சண்டைக்கு செல்கிறான்.;

Update: 2023-05-24 13:30 GMT

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் | Anna serial zee tamil today episode youtube 24 May 2023

ஜோதிடர் சண்முகத்துக்குதான் முதலில் கல்யாணம் நடக்கும் என்று சொல்கிறார். அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நாயகியான பரணி அறிமுகமாகிறார். பரணி ஒரு டாக்டராக அறிமுகமாகும்போது அவர் அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தையை சமாதானம் செய்துகொண்டிருக்கிறார்.

டாக்டருக்கு படிக்கும் ஒவ்வொருவரும் அவங்க ஊர்ல ஒரு வருசம் பயிற்சி எடுக்கணும் ஆனா நீங்க என்னன்னா உங்க சொந்த ஊருக்கு போகமாட்டேன் என்கிறீங்க என்று கேட்கிறார். அதற்கு அங்குதான் என் அப்பா இருக்கிறார் அதனால் போகமாட்டேன் என்று கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து பரணியின் அப்பா சவுந்திர பாண்டி பொம்பளைங்க நைட்ல நம்மள பாத்துக்கணும் பகல்ல புள்ளைங்கள பாத்துக்கணும் அவளுக வேலை அவ்வளவுதான் என ஆணவத்தோட ஆணாதிக்க மனப்பான்மை பேசுகிறார். அதோடு பஞ்சாயத்தில் ஒருவர் தங்கள் மகள் ஓடி போய்விட்டதாக சொல்ல பொட்டப்புள்ளைங்கள அடக்கி வளக்கணும் பாசம் காட்டி வளத்தா இப்படித்தான் ஓடி போவாளுக எங்க இருந்தாலும் அவள தேடி புடிச்சி கொன்னுடு, மத்தத நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறான்.

பரணியின் அம்மா பாக்கியம் பயந்து போய் ஒளிந்து நின்று ஜன்னல் வழியாக பார்க்கிறாள். அவளை வெளியே அழைத்து பொம்பள புள்ளைங்கள படிக்க கூடாதுனு சொல்றான் ஆனா பெத்த பொண்ண டாக்டருக்கு படிக்க வச்சிருக்கான்னு பாக்கறயா. அது என்னோட கௌரவம் அதுக்காக மட்டும்தான் படிக்க வச்சேன். அப்றம் விகேஎஸ் பாத்திரக்கடை ஓனர் மகனுக்கு உம்பொண்ண கட்டி குடுக்குறதா வாக்கு கொடுத்துருக்கேன். அவள வரச்சொல்லு என்கிறான். அதற்கு பதில் சொல்ல வாய் திறந்த பாக்கியத்தை எதிர்த்து பேசாம சொன்னத மட்டும் செய்யி என்று சத்தம் போடுகிறான்.

சண்முகம் வீட்டில் கந்தசஷ்டி பாடிக்கொண்டே சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். தங்கைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இசக்கி எல்லாருக்கும் தனித்தனியாக சாப்பாடு செய்து கொடுத்து ஒழுங்கா சாப்பிடணும் என செல்லமாக மிரட்டுகிறாள். அப்போது ஒரே ஒரு அண்ணன வச்சிட்டு நாங்க படுற பாடு இருக்கே என தங்கைகள் புலம்புகின்றனர்.

சண்முகம் பூஜை அறையில் இருக்கும் 5 உண்டியல்களில் ஒவ்வொன்றாக பணம் போட்டுக் கொண்டே வருகிறான். முதல் தங்கை முதல் கடைசி தங்கை வரை போட்டுவிட்டு தனக்கு போடாமல் மீண்டும் தங்கைகளின் உண்டியலிலேயே பணத்தைப் போடுகிறார்.

ஒவ்வொரு தங்கையாக அழைத்துச் சென்று விட்டுவிட்டு பசங்க கூட பேசக்கூடாது என்று சொல்லி அனுப்புகிறான். அந்த நேரத்தில் ரத்னாவுக்கு யாரோ ஒரு இளைஞன் லவ் லெட்டர் கொடுத்ததாக தெரியவர சண்முகம் கோபத்துடன் சண்டைக்கு செல்கிறான். இதனால் அடுத்த எபிசோடில் என்ன நடக்குமோ என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அண்ணா சீரியல் நேற்றைய எபிசோட் | Anna serial zee tamil Yesterday episode youtube 23 May 2023

நேற்றைய எபிசோடில் சண்முகம் ரவுடிகளை பேசியே ஓட விட்டதை நினைத்து அவனது தங்கைகள் நாலவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே கடையிலும் நாயகன் புகழ் பாடப்படுகிறது. கூடுதலாக காசு வாங்கமாட்டான். குடுத்த காசுக்கு குறைவா எதுவும் குடுக்கமாட்டான் என்பதை ஒரு காட்சியில் காட்டியிருக்கிறார்கள். அப்போது கடைக்கு ஒருவர் வருகிறார். அவர் இன்று செவ்வாய்க்கிழமை என்பதை சண்முகத்துக்கு நினைவூட்டுகிறார். செவ்வாய்க்கிழமை என்றறிந்ததும் வேக வேகமாக சர்ச்சுக்கு கிளம்பிச் செல்கிறான் சண்முகம்.

எம்மதமும் சம்மதம் என்று எல்லா சாமிகளையும் கும்பிடும் சண்முகம் வாரம் ஒருமுறை சர்ச்சுக்கு சென்று மெழுகு வர்த்தி ஏற்றி வழிபடுவது வழக்கமான ஒன்று. சண்முகம் சர்ச்சுக்கு செல்லும்போது அவனுடன் வெட்டுக்கிளியும் செல்கிறான்.

இசக்கியம்மாள், ரத்னா, வீரா, செல்லக்கனி என நான்கு தங்கைகளுக்கு எதிர்காலம் திருமணம் குறித்து வேண்டிக் கொள்கிறான் சண்முகம்.

ரத்னாவுக்காக முதல் மெழுகுவர்த்தியை ஏற்றி பள்ளி வாத்தியாரைக் கட்டிக்கிட்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறான். ஆனால் அவளுக்கு ஒரு பள்ளியையே நிர்வாகம் செய்யவேண்டும், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கவேண்டும் என்று ஆசை.

இரண்டாவதாக வீரலட்சுமிக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அவளுக்கு அமைதியான மாப்பிள்ளை அமைய வேண்டும் என்று வேண்டுகிறான். ஆனால் வீரலட்சுமிக்கு ஐபிஎஸ் அதிகாரியாகி நகரத்தை தன் கட்டுப்பாட்டில் அமைதியாக வைக்கவேண்டும் என்று ஆசை.

இசக்கியம்மாளுக்காக படிப்பறிவில்லாத அவள் நன்கு சமையல் செய்து அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அவளைப் புரிந்து கொண்டு வாழும் மாப்பிள்ளை வேண்டும் என்று வேண்டுகிறான். ஆனால் இசக்கியம்மாள் தன்னிடம் படிப்பறிவு இல்லை இருந்தாலும் மிகப் பெரிய பணக்காரராக பிசினஸ் உமனாக இருக்க வேண்டும் என ஆசை.

செல்லக்கனிக்கு படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பது ஆசை என நினைத்து சண்முகம் வேண்டுகிறான். ஆனால் உண்மையில் பாட்டுப்பாடுவதில் மிகச்சிறந்த பெண்ணாகி சினிமாவில் பெரிய பாடகியாக வேண்டும் என்பதுதான் அவளது ஆசையாக இருக்கிறது.

இதனையடுத்து சண்முகம் வீட்டுக்கு ஜோசியர் ஒருவர் வருகிறார். அவரிடம் 4 தங்கைகளின் ஜாதகங்களைக் கொடுத்து திருமண வாழ்க்கைப் பற்றி கேட்கிறார். அப்போது தங்கைகளுக்கு திருமணம் ஆவதற்கு முன்னரே சண்முகத்துக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று அவர் கூற, இனி உங்க இடத்துக்கு போயி பேசிக்கலாம் என அவரை அனுப்பி வைக்கிறார் சண்முகம்.

வீரலட்சுமி, செல்லக்கனி இருவரும் அண்ணனுக்கு முதலில் கல்யாணம் பண்ணி வைக்கணுமாம். இந்த ஜென்மத்துல அண்ணன் நமக்கு கல்யாணம் பண்ணிக்காம அது பண்ணிக்காது என்று சொல்ல, இப்போது ஹீரோயின் இன்ட்ரோ ஆகிறார்.

நித்யா ராம் இந்த சீரியலில் பரணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரின் எண்ட்ரி இன்று நடக்கிறது.

அண்ணா சீரியல் நாளைய எபிசோட் | Anna serial zee tamil tomorrow episode youtube 25 May 2023

இன்னமும் கதாநாயகி அறிமுகம் ஆகவில்லை என்பதால் இரண்டாவது நாள் கதாநாயகி அறிமுகம் ஆகும் காட்சி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News