சென்னை விமான நிலையத்தில் எல்லோரையும் வியக்க வைத்த நடிகர் அஜித்

''துணிவு' படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித்குமார் சென்ன விமான நிலையத்தில் எல்லோரையும் வியக்கவைக்கும் வகையில் செயல்பட்டார்.

Update: 2022-09-25 01:40 GMT

நடிகர் அஜித்குமார்.

நடிகர் அஜித் குமார் நடித்துவரும் 'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் அதகளப்படுத்தியுள்ளது. 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.

தற்போது, 'துணிவு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவுடன் நடிகர் அஜித் பாங்காக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சென்னை விமான நிலையத்தில் நடந்து செல்லும் காட்சிகள், ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, விமான நிலைய ஊழியர்களுக்கு மரியாதை செலுத்துவது என செம கெத்து காட்டியுள்ளார்.


நடிகை மஞ்சு வாரியரும் அஜித்துடன் பாங்காங்கில் நடைபெறப் போகும் 'துணிவு' படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயெனப் பரவி வருகிறது.

இந்தநிலையில், மஞ்சு வாரியர் முன்னாடி சென்றதும் அடுத்ததாக செக்கிங்கிற்குள் நுழையும் நடிகர் அஜித் குமார், அங்கிருந்த பெண் ஊழியரை பார்த்து சல்யூட் அடிக்கும் காட்சிகள் அஜித் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

Tags:    

Similar News