கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம்...

தமிழிசை;

Update: 2021-05-10 09:00 GMT

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம்

கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் ஏப்ரல் 18 முதல் முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், பகல் 2 மணி முதல் வைரமுத்து யூ டியூப் வலைத்தளத்திலும் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. நாட்படு தேறல் தொடரின் நான்காம் பாடலாக 'தமிழ் ஈழக் காற்றே' என்ற பாடல் நேற்று வெளியான. இசை : இசை அரசன், குரல் : சத்யபிரகாஷ், இயக்கம் : ஜீவா முகுந்தன்.

பாடல் வரிகள் :

தமிழ் ஈழக் காற்றே!

தமிழ் ஈழக் காற்றே!

விண்ணின் வழிவந்து வீசு – எங்கள்

மண்ணின் சுகம்கண்டு பேசு

*

உயிரைக் கொடுத்த அன்னை

கயிறாய்க் கிடப்பாளோ?

எலும்பைக் கொடுத்த தந்தை

நரம்பாய்க் கிடப்பாரோ?

நல்லூர் முருகன் கோயில்மணியில்

நல்லசேதி வருமோ?

உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்

உயிரும் உடலும் நலமோ?

ஓடிய வீதிகள் சுகமா – எங்கள்

ஒருதலைக் காதலி சுகமா?

பாடிய பள்ளிகள் சுகமா? – உடன்

படித்த அணில்கள் சுகமா?

ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்

உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ

*

முல்லைத் தீவின் கதறல்

மூச்சில் வலிக்கிறதே!

நந்திக் கடலின் ஓலம்

நரம்பை அறுக்கிறதே!

பிள்ளைக் கறிகள் சமைத்து முடித்த

தீயும் மிச்சம் உள்ளதோ?

எங்கள் ஊரை எரித்து மீந்த

சாம்பல் சாட்சி உள்ளதோ?

வன்னிக் காடுகள் சுகமா? – எங்கள்

வல்வெட்டித்துறையும் சுகமா?

காய்ந்த கண்ணீர் சுகமா? – இன்னும்

காயாத குருதியும் சுகமா?

ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்

உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ

Tags:    

Similar News