அந்தியூரில் ரூ.4.81 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில், 4 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-01-23 00:45 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று ஏலம் நடைபெற்றது. இங்கு  கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 27 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 530 ரூபாய்க்கும் ஏலம் போயின.

அதேபோல், தேன்வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 280 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 270 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 300 ரூபாய்க்கும்,  ரஸ்தாளி தார் ஒன்று 390 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் 2 ஆயிரத்து 700 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 81 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News