/* */

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவை : நாளை தொடங்குகிறது

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவையை ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் நிறுவனம் நாளையிலிருந்து தொடங்குகிறது.

HIGHLIGHTS

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவை : நாளை தொடங்குகிறது
X

சென்னையில் இருந்து பாரீஸ்க்கு நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது.

ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் இந்தியாவில் டில்லி,மும்பை,பெங்களூா் நகா்களுக்கு விமான சேவைகளை இயக்கிவருகிறது. ஆனால் சென்னைக்கு இல்லை.

இதனால் தமிழ்நாட்டிலிருந்து பாரீஸ் செல்பவா்கள் டில்லி,மும்பை சென்று இணைப்பு விமானங்களில் செல்ல வேண்டியநிலை உள்ளது.

எனவே தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து பிரான்ஸ் நாடு செல்ல நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்று விமானபயணிகள் குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியா்கள் தரப்பில் நீண்ட நாட்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

அந்த ஆசையை நிறைவேற்றும் விதத்தில் நாளையிலிருந்து ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ், பாரீஸ், சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது.

நாளை சனி காலை 10.25 மணிக்கு பாரீஸ்சிலிருந்து புறப்படும் ஏா் பிரான்ஸ் விமானம் நாளை இரவு 11.45 மணிக்கு சென்னை வருகிறது.ஞாயிறு முழுவதும் விமானிகள்,விமான ஊழியா்கள் ஓய்வு எடுக்கின்றனா்.திங்கள் அதிகாலை 1.20 மணிக்கு சென்னையிலிருந்து பாரீஸ்க்கு புறப்பட்டு செல்கிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஒன்றிய அரசு வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு தடைவிதித்துள்ளது.எனவே இந்த விமானத்தில் வெளிநாடு வாழ்இந்தியா்கள், மற்றும் ஒன்றிய அரசின் சிறப்பு அனுமதியுடன் மருத்துவ சிகிச்சை,காா்பிரேட் நிறுவன பணியாளா்கள் போன்ற அத்தியாவிசய பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

இதனால் வாரத்திற்கு ஒரு விமான சேவையை மட்டுமே இயக்க முடிவு செய்துள்ளது.ஜுலை 8 ஆம் தேதியிலிருந்து வியாழன் சென்னை வந்துவிட்டு,வெள்ளி ஓய்வு எடுத்துவிட்டு,சனிக்கிழமை மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறது.

கொரோனா வைரஸ் ஓய்ந்து ஒன்றிய அரசின் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கான தடை நீங்கிய பின்பு வாரத்தில் 3 விமான சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி பிரான்சிலிருந்து சென்னைக்கு செவ்வாய்,வியாழன்,ஞாயிறு ஆகிய நாட்களும்,சென்னையிலிருந்து திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய நாட்களிலும் விமான சேவைகளை இயக்க உள்ளது.

இந்த ஏா்பிரான்ஸ் போயீங் விமானத்தில் 279 சீட்கள் கொண்டது. விமானத்தின் பயண நேரம் 10 மணி 25 நிமிடங்கள். இந்த விமானத்தின் ஜன்னல்கள் மற்ற விமான ஜன்னல்களை விட 30சதவீதம் அகலமானது.இந்த விமானம் வானில் பறக்கும்போது அதிக அதிா்வுகள் இல்லாமல் மிதந்தப்படி செல்லும்.

Updated On: 25 Jun 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!