விபத்துகள் ஏற்படும் ஏரிக்கரை சாலை – தடுப்பு சுவர் தேவை என மக்கள் கோரிக்கை

விபத்துகள் ஏற்படும் ஏரிக்கரை சாலை – தடுப்பு சுவர் தேவை என மக்கள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே, பவித்திரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செல்லிபாளையம் மெயின் ரோட்டில் ஒரு பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையின் வழியாக துறையூர் சாலை சென்றதால், இப்பாதையில் தினமும் பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் செல்லுகின்றன. இதன் விளைவாக, தொடர்ச்சியாக சாலை ஓரங்களில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை மீது குழிகள் உருவாகி பயணிகளுக்கு சிரமம் தருகிறது. மேலும், இரவு நேரங்களில் இந்த பகுதியில் பார்வை தெளிவாக இல்லாத நிலையில், தடுப்பு சுவர் இல்லாத ஏரிக்கரையில் வாகனங்கள் தவறிவருவதால் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, வெளியூரிலிருந்து வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை அருகே நிலை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தற்போது, இந்த ஏரிக்கரையின் முக்கிய இடங்களில் தடுப்பு சுவர் இல்லாததால் மக்கள் உயிர் பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள், செல்லிபாளையம் ஏரிக்கரையில் முழுமையான தடுப்பு சுவர் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu