நாமக்கலில் கோடைகால கலை பயிற்சி முகாம் தொடக்கம்

நாமக்கலில் கோடைகால கலை பயிற்சி முகாம் தொடக்கம்
நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நுண்கலை திறன்களை ஊக்குவிக்கும் நோக்குடன், ஆண்டுதோறும் மே 1 முதல் 10 வரை கோடைக்கால கலை பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 25வது ஆண்டாக நிகழும் இப்பயிற்சி முகாம், நேற்று நாமக்கலில் கோலாகலமாக தொடங்கியது. இதில் பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியம், கைவினை, யோகா, சிலம்பம், கராத்தே போன்ற பல்வேறு நுண்கலை வகைகளில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முகாம், நாமக்கல் மாநகராட்சி கோட்டை துவக்கப்பள்ளியில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் சிறப்பாக செயல்படும் குழந்தைகள், மாநில மற்றும் தேசிய அளவிலான கலை முகாம்களுக்கு அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். இந்த அரிய வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்தி, தங்களது குழந்தைகளை முகாமில் கலந்து கொள்ளச் செய்து நன்மை பெறலாம் என, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் திரு. தில்லை சிவக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu