கொல்லிமலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான திட்டம்

கொல்லிமலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான திட்டம்
கொல்லிமலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில், வனத்துறை சார்பாக முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வளமிகு வளர்ச்சி திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடுதல், தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. குறிப்பாக கொல்லிமலை பஞ்சாயத்து யூனியனில் உள்ள வரகூர் காப்புகாடு பகுதிகளில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பைல்நாடு, வரகூர், அடுக்கம் புதுக்கோம்பை, குண்டூர் மற்றும் செல்லூர் ஆகிய காப்புகாடு பகுதிகளில் தலா மூன்று லட்சம் ரூபாய் செலவில், மொத்தமாக 15 லட்சம் ரூபாயில் ஐந்து தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தவிர, பைல்நாடு, அடுக்கம் புதுக்கோம்பை மற்றும் வரகூர் பகுதிகளில் தலா ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மொத்தமாக 15 லட்சம் ரூபாயில் மூன்று கசிவுநீர் குட்டைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, செல்லூர் காப்புகாடு பகுதியில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு தடுப்பணை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் காப்புகாடுகளில் அமைக்கப்பட்டதன் மூலம், சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், நீர்ப்பாசன வசதிகள் மேம்படுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் உமா மற்றும் வனபாதுகாவலர் கலாநிதி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu