மீனவர்க்கு ST?—இடைப்பாடி சாலையில் வெடித்த கோரிக்கையின் உண்மை

பழங்குடியின பட்டியலில் மீனவரை சேர்க்க ஆர்ப்பாட்டம்
இடைப்பாடி: மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில், இடைப்பாடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இடைப்பாடி சட்டசபை தொகுதி ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரத்பாபு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
உங்களுக்கும் இந்த குரல் தேவை என்றால் பகிருங்கள்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu