சீதா,ராமர் திருக்கல்யாண வைபவம்

சீதா,ராமர் திருக்கல்யாண வைபவம்
X
குமாரபாளையம் ராமர் கோவிலில், சீதாதேவி திருக்கல்யாணம், திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது

சீதா,ராமர் திருக்கல்யாண வைபவம்

குமாரபாளையம் ராமர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் சுவாமிக்கு கட்டளைதாரர்கள் ஏற்பாடுகளில், தினசரி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, நேற்று சீதாதேவி திருக்கல்யாணம் மிகுந்த பக்தி மற்றும் பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து ராமர் மற்றும் சீதாதேவி சுவாமிகள் திருவீதி உலாவாக பவனி வந்தனர். இதில், சிறுமியர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு கோலாட்டம் ஆடி, மகிழ்ச்சியை பகிர்ந்தனர். விட்டலபுரி, பஸ் ஸ்டாண்ட், இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பவனி நடைபெற்றது. திருவீதி உலா நிகழும் வழியெங்கும் பக்தர்கள் தண்ணீர் ஊற்றி, மலர்களை தூவி, ஆரத்தி எடுத்துப் பரம பக்தியுடன் ராமர் – சீதாதேவி சுவாமிகளை வரவேற்றனர். மேலும், நிகழ்வை ஒட்டி பக்தி பஜனை மற்றும் கீர்த்தனைகள் தினசரி நடைபெற்று வருவது விழாவுக்கு மேலும் ஆனந்தத்தை கூட்டி உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future