பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
X
தாரமங்கலம் அருகே கடந்த 45 நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

குடிநீர் இழப்பால் சாலை மறியல் – காலி குடங்களுடன் போராட்டத்தில் மக்கள்

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி ஊராட்சியில் அமைந்துள்ள மந்திவளவு, சோலைநகர், கரட்டூர் மற்றும் நேரு நகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த 45 நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை.

குடிநீர் பற்றாக்குறை காரணமாக வேதனையடைந்த மக்கள், நேற்று காலை அழகுசமுத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் சேலம் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காலை 11:50 முதல் 12:20 மணி வரை நடைபெற்று, சுமார் 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நெரிசலுடன் குவிந்தன.

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் முருகன் மற்றும் போலீசார் மத்தியிலான பேச்சுவார்த்தையின் பின்னர், பொதுமக்கள் அமைதியாக போராட்டத்தை கைவிட்டனர். குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Tags

Next Story