தென்னையை காக்கும் காண்டாமிருக வண்டு பொறி திட்டம்

தென்னையை காக்கும் காண்டாமிருக வண்டு பொறி திட்டம்
X
தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தபடுகிறது

தென்னையை காக்கும் காண்டாமிருக வண்டு பொறி திட்டம்

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட செம்பாம்பாளையம் கிராமத்தில், கிராமப்புற அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, ஒரு தனியார் வேளாண்மை கல்லூரியின் மாணவர்கள் வேளாண் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தென்னை மரங்களை கடுமையாக தாக்கும் காண்டாமிருக வண்டுகளை எப்படி மேம்பட்ட முறையில் கட்டுப்படுத்தலாம் என்பதுபற்றி செயல்விளக்கம் வழங்கப்பட்டது. இதில், காண்டாமிருக வண்டு பிடிக்க பயன்படுத்தப்படும் 'வண்டு பொறி'யின் செயற்பாடு மற்றும் அதன் தயாரிப்பு முறை குறித்து விவரிக்கப்பட்டது. குறிப்பாக, இந்த வண்டு பொறியை தயிர் மற்றும் ஆமணக்கு எண்ணெய் போன்ற எளிய இயற்கை பொருட்கள் கொண்டு எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும், அதை தென்னை தோட்டங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் மாணவர்கள் விவசாயிகளுக்கு நேரில் செயல்விளக்கம் அளித்து எடுத்துரைத்தனர். இதனால், உள்ளூர் விவசாயிகள் இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு, தங்கள் பண்ணைகளில் காண்டாமிருக வண்டுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கும் வழிகளில் ஆர்வம் காட்டினர். இந்த வகை பயிற்சி நிகழ்வுகள், விவசாய அறிவு பரிமாற்றத்திற்கும், பசுமை தொழில்நுட்பங்கள் பரவுவதற்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது.

Tags

Next Story