நாமக்கல் பள்ளி மாணவிகள் சாதனை – CBSE தேர்வில் 100% தேர்ச்சி

நாமக்கல் பள்ளி மாணவிகள் சாதனை – CBSE தேர்வில் 100% தேர்ச்சி
நாமக்கலில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளி, 2025ஆம் ஆண்டுக்கான பத்து மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, கல்வி தரத்தில் முக்கியமான சாதனையைப் பதிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பில் கல்வி பயின்ற மாணவி ஸ்ரீநிதி, தமிழ், கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் மற்றும் அறிவியல் 99, ஆங்கிலம் 98 என மொத்தம் 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து பெரும் பெருமையை பெற்றுள்ளார். இவரைப் தொடர்ந்து ஸ்ருதிகா 491 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், அக்ஷத், சிவராஜ் மற்றும் ஜீவிகா ஆகியோர் தலா 490 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதையடுத்து, பத்தாம் வகுப்பில் மட்டும் 13 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் ஏழு பேர், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலா இரண்டு பேர், கணிதம் மற்றும் சமூக அறிவியலில் தலா ஒருவர் என குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 50% மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளனர், இது பள்ளியின் கல்வித் தரத்தை உறுதியுடன் காட்டுகிறது.
பிளஸ் 2 தேர்விலும் வெற்றி தொடர்ந்துள்ளது. சஞ்ஜிதா கண்ணன் 484 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து நிரஞ்சன் 474, ஆரவ் சிவராஜ் மற்றும் சக்தி நந்தன் தலா 473 மதிப்பெண்களுடன் இரண்டாம், மூன்றாம் இடங்களில் உயர்ந்துள்ளனர். ஓவியம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் 99 மற்றும் 100 மதிப்பெண்கள் பெற்று உயர் ரேங்கில் திகழ்கின்றனர். மாணவர்கள் பெற்ற வெற்றிக்கு, பள்ளி தலைவர் சரவணன், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu