தென்னை தோட்டங்களுக்கு வானிலை காப்பீடு திட்டம் – விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி

தென்னை தோட்டங்களுக்கு வானிலை காப்பீடு திட்டம் – விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி
நாமக்கல் மாவட்டத்தில் தென்னை தோப்புகள் பரவலாக காணப்படும் நிலையில், இந்தத் தோட்டங்களுக்கு வானிலை சார்ந்த காப்பீடு திட்டம் வழங்கப்படுவதாக மத்திய அரசு நலத்திட்டத் துறையின் பா.ஜ. மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இந்திய வேளாண்மை காப்பீடு நிறுவனம் (AIC) அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கருக்கு ரூ.8,097.16 மதிப்புள்ள காப்பீடு வழங்கப்படுவதுடன், விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு ரூ.534 ஆகும். விவசாயிகள் ஏப்ரல் 21க்குள் இந்தத் திட்டத்தில் இணையலாம். திட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே இழப்பீடுகள் வழங்கப்படும்.
காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வாரிசுதாரரின் ஆதார் அட்டை, சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்கள், தொலைபேசி எண்ணுடன் கையில்கொண்டு செல்ல வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், மகசூல் பாதிப்பு, பூச்சி தாக்கம் அல்லது பிற காரணங்களால் நேரும் தனிப்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மொபைல் எண் 9965845998-ல் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu