இடியால் உயிரிழந்த பசுமாடு - துயரத்தில் விவசாயி குடும்பம்

இடியால் உயிரிழந்த பசுமாடு - துயரத்தில் விவசாயி குடும்பம்
X
கொல்லிமலையில், மாட்டு கொட்டகையில் இருந்த பசுமாட்டின் மீது நேரடியாக இடி தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இடியால் உயிரிழந்த பசுமாடு - துயரத்தில் விவசாயி குடும்பம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள கொல்லிமலை திருப்புலிநாடு பஞ்சாயத்தில் உள்ள சுள்ளுக்குழிப்பட்டி மலை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45) என்பவர் ஒரு விவசாயி. அவர் தன் வீட்டு அருகே அமைத்திருந்த மாட்டு கொட்டகையில் இரண்டு பசுமாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை கொல்லிமலை பகுதியில் வானம் கருமையாகி, திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அந்த மழையின் போது ஏற்பட்ட ஒரு பயங்கரமான இடி தாக்கம், ராஜேந்திரனின் மாட்டு கொட்டகையில் இருந்த ஒரு பசுமாட்டை நேரடியாக தாக்கியது. இடிபட்ட அதிர்வில் அந்த பசுமாடு உயிரிழந்தது. மற்றொரு பசுமாடு கடுமையாக காயமடைந்து, கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட இந்த துயர சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பசுமாடு பலியாக, அந்த குடும்பத்தின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றொரு மாடுக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. விவசாயிகள், அரசு மாடுப் பசியின் இழப்பிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story