கவர்னருக்கு எதிரான உச்சநீதி மன்ற தீர்ப்பு, தி.மு.க. வினரின் உற்சாக கொண்டாட்டம்

கவர்னருக்கு எதிரான தீர்ப்பு: தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் கவர்னரின் தலையீடு அதிகரிப்பதாகவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி:
1. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் முடிவையோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் முடிவையோ கவர்னர் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும்.
2. அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக மசோதாவைத் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அந்த முடிவை மூன்று மாதங்களுக்குள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு கவர்னருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்கும் வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) சார்பில் பரமத்தி வேலூர் சாலையில் உள்ள செலம்ப கவுண்டர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu