தொடர் மழை காரணமாக செங்கல் உற்பத்தி பாதிப்பு

தொடர் மழை காரணமாக செங்கல் உற்பத்தி பாதிப்பு
வெண்ணந்தூர் பகுதியில் தொடர் கோடை மழையால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன, இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
மழை காரணமாக செங்கல் உற்பத்திக்கு தேவைப்படும் மண் நனைந்து, அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது, இதனால் செங்கல் அறுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், காய வைத்திருக்கும் செங்கல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மழைக்கு முன் அறுக்கப்பட்ட செங்கற்கள் சூளையில் வேக வைக்க முடியாமல், கொட்டகை அமைத்து பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கோடை மழையால், பெரும்பாலான இடங்களில் கட்டடப்பணி நடக்காமல் உள்ளது. ஏற்கனவே சூளையில் வேக வைக்கப்பட்ட கற்கள் விற்பனையாகாமல் உள்ளதால், சூளை வைத்திருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சூளை உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மழை காரணமாக செங்கல் உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu