பொன்விழா நகரில் முத்து மாரியம்மன் திருவிழாவின் அழகு

பொன்விழா நகரில் முத்து மாரியம்மன் திருவிழாவின் அழகு
நாமக்கல் திருச்சித் சாலையில் பொன்விழா நகரில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இவ்வாண்டு திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருவிழாவின் ஆரம்பம் ஏப்ரல் 27 அன்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருவதுடன், பின்பு காப்பு காட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சி இடம்பெற்றது. 28 ஆம் தேதி முதல் மே 3 வரை தினமும் முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மே 4 ஆம் தேதி, தேரில் கலசம் வைத்து, கரகம் பாலித்து சக்தி அழைக்கப்பட்டது. அன்றிரவு, வடிசோறு படைத்தல் மற்றும் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. 5 ஆம் தேதி காலை, மாவிளக்கு பூஜை, மாலை 3:30 மணிக்கு பக்தர்கள் ஊர்வலமாக வந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று, 6 ஆம் தேதி காலை 8:30 மணிக்கு மாரியம்மன் தேரில் ரதம் ஏறுதல், 9:00 மணிக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தல் மற்றும் மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் வைபவம் நடத்தப்பட்டது. இன்று, முத்து மாரியம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், அம்மன் குடி புகுதல் மற்றும் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திருவிழாவை பொன்விழா நகர் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu