நாமக்கலில் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

நாமக்கலில் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை (மே 13) நடைபெறும் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற வேண்டுமென, மாவட்ட கலெக்டர் உமா பொதுமக்களுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த முகாம், பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைப்பில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ. படித்து முடித்தவர்களும், இதுவரை தொழில்பழகுனர் பயிற்சி மேற்கொள்ளாதவர்களும் இதில் பங்கேற்கலாம்.
பங்கேற்பதற்காக, விண்ணப்பதாரர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், ஆதார் அட்டை, தேசிய அல்லது மாநில தொழிற்சான்றிதழ் ஆகியவற்றின் அசலும் நகல்களும் கொண்டு வர வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்றாம் மாடி, அறை எண் 304-306, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 04286–290297, 94877 45094, 79041 11101 என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu