100 சதவீத ஓட்டுப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

100 சதவீத ஓட்டுப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
2026-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், ஓட்டுப்போடுவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று, நாமக்கல் பூங்கா சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓட்டளிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இதில், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் உறுதிமொழியை ஏற்று, ஓட்டுப்பதிவில் தங்கள் பங்கேற்பை உறுதி செய்தனர். நிகழ்வில் நாமக்கல் ஆர்.டி.ஓ. சாந்தி, தொழிலாளர் நல உதவி ஆணையர் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் மூலம், மக்கள் ஓட்டளிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேர்தல்களில் முழுமையாக பங்கேற்கும் மனோபாவத்தை வளர்க்கும் நோக்கம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu