கொடியேற்றத்துடன் தொடங்கிய அத்தனூர் அம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா

கொடியேற்றத்துடன் தொடங்கிய அத்தனூர் அம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
வெண்ணந்தூர் அருகே, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைக்குச் சற்று ஒதுக்கிடம் உள்ள அத்தனூர் அம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா பக்திபூர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக, நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.
கொடியேற்ற தினத்தன்று குதிரை வாகனத்தில் அம்மன் பவனி வந்தார். இன்று சிம்ம வாகனம், நாளை காமதேனு வாகனம், அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி பூத வாகனம், 24ஆம் தேதி பல்லாக்கு வாகனம், 25ஆம் தேதி அன்ன வாகனம் என, எதிர்கால நாள்களில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு உலா நடைபெற உள்ளது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா சிறப்பாக நடைபெற கோவில் செயல் அலுவலர் சிவகாமி தலைமையில் ஆயத்தங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu