நாமக்கலில் ஆம்புலன்ஸ் பணியிடத் தேர்வு

ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணி: 10 பேர் தேர்வு; பயிற்சிக்கு பின் ஆணை
நாமக்கல்லில் '108' அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய பயிற்சி முடிந்த பின்னரே பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்-மோகனூர் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். சேலம் மண்டல வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் மற்றும் நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெற்ற தேர்வு முகாமில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் டிரைவர் பணிக்கு மூன்று பேரும், மருத்துவ உதவியாளர் பணிக்கு ஏழு பேரும் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எழுத்துத்தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வைச் சோதனை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.
இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் டிரைவர்களுக்கு சென்னையில் 10 நாட்கள் முழுமையான வகுப்பறைப் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னரே பணி ஆணை வழங்கப்படும். அதேபோல், மருத்துவ உதவியாளர்களுக்கு சென்னையில் 50 நாட்கள் முழுமையான வகுப்பறைப் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu