ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி – நாமக்கலில் தேசிய கொடி பேரணி

ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி – நாமக்கலில் தேசிய கொடி பேரணி
X
நாமக்கல் மாவட்டத்தில் வரும் மே 23ம் தேதி பாஜக சார்பில், தேசிய கொடி பேரணி தேசபக்தி உணர்வையும், தேசிய ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்தோடு நடத்தப்பட உள்ளது

ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி – நாமக்கலில் தேசிய கொடி பேரணி

இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற ரகசிய நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாடு இந்திய பாதுகாப்புத் துறையின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. இதன் வெற்றியை நாடு முழுவதும் பாஜக வலியுறுத்தி கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் வரும் மே 23ம் தேதி ‘தேசிய கொடி பேரணி’ நடத்தப்பட உள்ளது.

இந்த பேரணிக்கான மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களையும், ஒவ்வொரு தொகுதிக்கு தனித்தனி நிர்வாகிகளை ஒதுக்கியும் பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்ட பொறுப்பாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் சேதுராமன், பொருளாளர் ரவி, மற்றும் முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சேந்தமங்கலம் தொகுதி பொறுப்பாளராக பொதுச்செயலாளர் பிரபு, நாமக்கல் தொகுதிக்கு ராம்குமார், ராசிபுரம் தொகுதிக்கு சுகன்யா ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த பேரணி அரசியல் மட்டுமல்லாமல், தேசபக்தி உணர்வையும், தேசிய ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்தோடு நடைபெறவுள்ளதால், மாவட்டம் முழுவதும் கட்சி தொண்டர்கள் அதில் பங்கேற்கத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் சரவணன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் பாஜகவின் மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story