கட்டிடம் கட்ட பாலைவன மணல் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை..? படிங்க..!

கட்டிடம் கட்ட பாலைவன மணல் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை..? படிங்க..!
X

பாலை மணல் (கோப்பு படம்)

பாலைவன மணல் ஏன் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த முடிவதில்லை என்று இதுவரை சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா? இப்போ தெரிஞ்சுக்கங்க.

உலகளவில் மணலுக்கான தேவை எகிறிக்கிடக்கிறது. மேலும் இது பல தொழில்களில், குறிப்பாக கட்டுமான தொழிலில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பாலைவனங்களில் மணல் நிரம்பியிருப்பதால், அந்த மணலை பயன்படுத்துவது என்பது கிட்டத்தட்ட வற்றாத வளம் என்று தவறாக எண்ணிவிடவேண்டாம்.

ஏனெனில் பாலைவன மணல், ஆற்று மணலைப்போல கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. மேலும் செயற்கை மணலுக்குப் பதிலாக பாலைவன மணலை கட்டுமானப் பொருளாக ஏன் அதை மாற்ற முடியாது என்ற கேள்வி நமக்கு எழுவது நியாயமானதே.

1. வானிலை மாற்றங்களால் உருவானது

பாலைவன மணல் முக்கியமாக காற்றினால் உருவாகிறது. வறண்ட பகுதிகளில், வானிலையின் தாக்கத்தால் கற்கள் மெதுவாக நொறுங்குகின்றன. கோபி போன்ற நிலப்பரப்புகளை உருவாக்க பெரிய கற்கள் உள்ளன. மேலும் சிறிய கல் துகள்கள் காற்றின் தாக்கத்தால் பாலைவனங்களை உருவாக்குகின்றன. (கோபிஎன்பது காலி பிளவர்-காலி பிளவர் அமைப்பிலான கற்கள்)

பாலைவன மணல் பெரும்பாலும் வானிலை மாற்றங்களான காற்று மற்றும் மழை போன்றவைகளால் அரிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு, உடைந்து, சிதறி உருவாகின்றன. அவ்வாறு உருவான பாலை மணலுக்கு ஒட்டும் தன்மை இல்லை.

2. அதிக சன்னமானது

கட்டுமான மணலின் அளவு அடிப்படையில் 1 மிமீ மற்றும் அதற்கும் சற்று அதிகமாக உள்ளது. தரப்படுத்தல் தேவைகளை அடைய பல்வேறு துகள் அளவுக்கு நாம் மணலை சலித்து பிரித்து எடுக்கிறோம்.ஆனால் பாலைவன மணல் காற்றினால் சிதறடிக்கப்பட்டு , படிவுகளாகி உருவாவதால் அதன் துகள் அளவு மிகவும் சிறியதாக (பொதுவாக 0.25 மிமீ கீழே), உள்ளது.

3. மோசமான பிளாஸ்டிக்

கட்டுமான மணல் துகள்களின் குறுக்குவெட்டு பொதுவாக வட்டமானது. இதனால் மணலின் விசை மிகவும் சீரானது. மேலும் ஆற்றின் அடிப்பகுதியில் உள்ள மணல் ஆற்றின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அந்த துகள்கள் ஆற்றின் குறுக்கே உருள்வதால் அதன் வடிவம் சீராக அமைகிறது. நாம் தேர்ந்தெடுக்கும் ஆற்று மணலின் அமைப்பு முழுமைபெற்ற அமைப்பாக உள்ளது. பாலைவன மணல் மென்மையானது மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெய் அதில் உள்ளது. அதனால் அதில் பிளாஸ்டிசிடி இல்லை. சாதாரண கட்டுமான மணலில் கூட்டுப் பொருளுடன் இணையும் பிளாஸ்டிசிட்டி இருக்கிறது. அதனால் கெட்டித்தன்மை கிடைக்கிறது.

4. பாலை மணலில் அதிக காரத்தன்மை

பாலைவன மணல் காற்று மற்றும் சூரிய ஒளியின் வறண்ட சூழலில் நீண்ட கால வானிலை மாற்றங்களால் உருவாகிறது. அதில் அதிக கார உள்ளடக்கம் இருக்கிறது. இது கட்டுமானப் பொருட்களில் உள்ள சில பொருட்களுடன் வினைபுரியும். அதனால் இது மணல் மற்றும் சரளைக் கலவையின் தரத்தை பாதிக்கிறது. இதனால் கட்டிடத்தின் வலிமை மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது.

5. குறைந்த மதிப்பீடு

பாலைவன மணல் பெரும்பாலும் குறைந்த இடத்திற்குள்ளான வானிலைக்கு உட்பட்டது. நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை. மேலும் ஒரே மாதிரியான அமைப்பில் இல்லாமல் வெவ்வேறு அளவுகளில் மணல் ஒன்றோடொன்று கலக்கப்படுகின்றன. மேலும் இந்த தரத்திலான மணல் கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்த ஏற்றது அல்ல.

6. தூய்மையற்ற தன்மை

கட்டுமான மணலில் அதிக சேறு தேவை. பாலைவன மணல் அசுத்தங்கள் வடிகட்டப்படாத, அதிக களிமண் உள்ளடக்கம் கொண்டிருக்கும். இது கான்கிரீட்டுக்கு பயன்படுத்தினால், கான்கிரீட் வலிமை வெகுவாகக் குறையும். மறுபுறம், ஆற்று மணல், நீண்ட தூரத்திலிருந்து நீர் நீரோட்டங்களால் கழுவப்பட்டு டெபாசிட் செய்யப்படுகிறது. மேலும் நீண்ட நேரம் கழுவி சுத்தப்படுத்தப்பட்ட பிறகு, அது மிகவும் சுத்தமாகிறது. அது கட்டுமானத்திற்கு ஏற்றதாகிறது.

7. அதிக போக்குவரத்து மற்றும் சுரங்க செலவுகள்

பாலைவனங்கள் பொதுவாக நகரங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. மேலும் போக்குவரத்து செலவுகள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய செலவுகள் அதிகரிக்கும். ஆகவே பாலைவன மணல் மலிவான விலையில் கிடைக்காது. (இப்போது ஆற்று மணல் மட்டும் விலை மலிவாகவா கிடைக்கிறது?? என்று நீங்கள் நினைப்பது தெளிவாக கேட்கிறது)

ஆற்று மணலுக்கே இந்த விலை என்றால் அதிக செலவு செய்து கொண்டுவரப்படும் மணலை என்ன விலைக்கு விற்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள். சுருக்கமாக சொல்லப்போனால் பாலைவன மணல் உருவாக்க உற்பத்தி செலவு ஜாஸ்திங்க. அதனால் ரேட்டும் ஜாஸ்தியாகும்.

எதுக்கு நாம பாதுகாப்புடன் விளையாடனும்? வலிமையான பாதுகாப்பான கட்டிடத்துக்கு ஆற்றுமணல்தான் பாதுகாப்பானது என்று கூறி விவாதத்தை..சாரி கட்டுரையை முடிக்கிறேன்.

Tags

Next Story
use of ai in agriculture