மின்னலை தாங்கும் பனை..! பனை மீது இடி விழுவது ஏன்?

மின்னலை தாங்கும் பனை..! பனை மீது இடி விழுவது ஏன்?
பனை மரத்தின் நன்மை குறித்து நம்மில் பலருக்கும் தெரியாமல் இருப்பது வேதனைக்குரியது. பனையின் அத்தனை பாகங்களும் மனிதருக்கு நன்மை தருபவையே.

Palm Trees Act As Natural Lightning Conductors,Palm Tree Planting to Combat Lightning Deaths,Odisha Government

நாம் சிறுவயது முதலே பனை மரங்களின் மீது இடி விழுவதை பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். பனை மரங்கள் மின்னல் தாக்குதல்களைத் தணிக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன.

விழிப்புணர்வு

தமிழகத்தில் நமது முன்னோர்கள் வயல்வெளிகளில் நட்டுவைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அதன் சக்தியும் திறனும் தெரியாமல் அதை அழித்து வருகிறோம். பனையின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது.

Palm Trees Act As Natural Lightning Conductors

அதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பல அமைப்புகள் பனை விதை நடுவதை ஒரு இயக்கமாக செயல்படுத்தி வருகின்றனர். இது ஒரு நல்ல மாற்றத்திற்கான திறவுகோலாகும்.


பனையில் இருக்கும் மின்னலைத்தாங்கும் சக்தி விஞ்ஞானிகளை பல நூற்றாண்டுகளாக சிந்திக்கத் தூண்டும் செயலாக இருந்துவருகிறது. இந்த இயற்கை பாதுகாப்பு பொறிமுறையானது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகள் போன்ற அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் பாதுகாப்பு அரணாக உள்ளது.

உதாரணமாக, இந்தியாவின் ஒடிசா மாநிலம், மின்னல் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதில் பனை மரங்களின் நன்மைகளை சார்ந்துள்ளது. மேலும் இறப்புகளைக் குறைக்க பெரிய அளவில் பனை நடும் திட்டத்தை கையில் எடுத்து பயிரிடத் தொடங்கியுள்ளது.

மின்னல் தாக்குதல்களைத் தணிப்பதில் பனை மரங்கள் திறம்பட செயல்பட முதன்மையான காரணங்களில் ஒன்று அவற்றின் அதிக ஈரப்பதம் ஆகும். பனை மரங்களின் தண்டுகளில் நீர் மற்றும் சாறு நிரம்பியுள்ளது, இது மின்னல் தாக்கத்திலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி வெளியேற்றும்.

இந்த அதிக ஈரப்பதம் இயற்கையான கடத்தியாக செயல்படுகிறது. இதனால் மின்னல் மரத்தின் வழியாகவும் தரையிலும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தாது. மின்னல் தாக்குதல் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையை எதிர்த்துப் போராட 1.9 மில்லியன் பனை மரங்களை நடுவதற்கு ஒடிசா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

Palm Trees Act As Natural Lightning Conductors

பனைமரத்தின் உயரம்:

பனை மரங்களின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் அவற்றின் உயரம். பனை மரங்கள் பெரும்பாலும் சுற்றியுள்ள தாவரங்களை விட உயரமானவை, இதனால் அவை மின்னலால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஒரு பாதகமாகத் தோன்றினாலும், இது உண்மையில் அருகிலுள்ள மற்ற தாவரங்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது.

மின்னல் தாக்குதல்களை ஈர்ப்பதன் மூலம், பனை மரங்கள் இயற்கை மின்னல் கம்பிகளாகச் செயல்படுகின்றன. மேலும் பாதிக்கப்படக்கூடிய இலக்குகளிலிருந்து மின்சார ஆற்றலைத் திசைதிருப்புகின்றன. மற்ற மின்னல் பாதுகாப்பு கிடைக்காத கிராமப்புறங்களில் இந்த பாதுகாப்புப் பங்கு மிகவும் முக்கியமானது.


ஒடிஷா அரசின் பனை நடவுத் திட்டம்

மின்னல் தாக்குதல்களைத் தணிப்பதில் பனை மரங்களின் செயல்திறனை பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. உதாரணமாக, ஒடிசா அரசாங்கம் மின்னலுக்கு எதிரான இயற்கை பாதுகாப்பாக பனை மரங்களை நடுவதற்கு குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கியுள்ளது.

Palm Trees Act As Natural Lightning Conductors

இந்த முன்முயற்சியானது காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக அதிகரித்து வரும் மின்னல் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். மாநிலத்தின் புவியியல் இருப்பிடம் மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவை குறிப்பாக மின்னல் தாக்கங்களுக்கு ஆளாகின்றன, கடந்த 11 ஆண்டுகளில் 3,790 இறப்புகள் பதிவாகியுள்ளன.

பனை மரங்கள் மின்னல் தாக்குதல்களைத் தாங்கும் திறன், அவற்றின் செயல்திறனுக்கு பங்களிக்கும் மற்றொரு காரணியாகும். பெரும்பாலான பனை மரங்கள் மின்னல் தாக்கத்தை கடுமையான சேதம் இல்லாமல் தாங்கும்.

நிலையான தீர்வு :

அவற்றின் அடர்த்தியான பட்டை மற்றும் கடினமான இலைகள் தாக்குதலின் வெப்பம் மற்றும் சக்தியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க உதவுகின்றன. அவை தொடர்ந்து வளரவும் பாதுகாப்பை வழங்கவும் அனுமதிக்கிறது. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மின்னல் தாக்குதலைத் தணிக்க பனை மரங்களை நடுவதன் மூலமாக ஒரு நிலையான மற்றும் நீண்ட கால தீர்வுக்கு வழிவகுக்கும்.

Palm Trees Act As Natural Lightning Conductors

மின்னல் தாக்குதல்களைத் தணிப்பதில் பனை மரங்களின் பங்கு, சுற்றுச்சூழல் சவால்களுக்கு இயற்கை எவ்வாறு தீர்வுகளை வழங்குகிறது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம்.

இந்த இயற்கையான பாதுகாப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம், மின்னலின் ஆபத்துக்களில் இருந்து மனித உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கான உத்திகளை நாம் உருவாக்கலாம்.


பனை பொருட்கள்

பனை பொருட்களில் முதன்மையானது பதநீர் ஆகும். பனை வெல்லம் (கருப்பட்டி), பனங்கற்கண்டு, பனஞ்சர்க்கரை, பனங்கற்கண்டு மிட்டாய், கருப்பட்டி அல்வா, கருப்பட்டி சாக்லேட் போன்ற பல்வேறு பனை உணவுப் பொருட்கள் பதநீரை மூலப் பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. பருவ காலத்தில் பனை மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள பனை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் மக்கள் விரும்பி அருந்தக்கூடிய ஒரு பிரபலமான இயற்கையான பானமாகும்.

பனையிலிருந்து உண்ணாப் பொருட்களான பனந்தும்பு தூரிகைகள், பனை ஓலை விசிறிகள், பாய்கள், பனை ஓலையினாலான பல்வேறு கூடைகள், பனை நார் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான இயற்கையான வண்ணம் பூசப்பட்ட மற்றும் வண்ணம் பூசப்படாத கைவினைப் பொருட்கள் போன்றவை பனைத் தொழில் கைவினைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன.

பழந்தமிழர் வாழ்வில் பனை மரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டது. தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து இருந்தது. விழாவிற்கும் (திருமணம் -தாலி மற்றும் காதணி), ஓலைச்சுவடி, இனிப்புக்கும், மர வேலை, நாட்டு மருந்து ஆகிய பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய அரிய மரமாக பனை விளங்கியது.

பனையின் சிறப்புகள்

பனைமரம் தமிழர்களின் அடையாளம். பனையின் வேர் முதல் நுனி வரை பயன் தருகிறது. எனவே இதற்கு ‘கற்பகதரு’ என்று பெயர். இதில் 801 பயன்பாட்டு பொருட்கள் இருப்பதாக ‘தாலவிலாசம்’ என்ற நுால் கூறுகிறது. பனைமரம் பல்லுயிர் களின் வாழிடமாக உள்ளது.

நாம் பயன்படுத்தும் காகிதத்தின் ஆயுட்காலம் நுாறு ஆண்டுகள். பனை ஓலையின் ஆயுட்காலமோ 400 ஆண்டுகள். பண்டைய கால இலக்கியங்கள் எல்லாம் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டன.

நீர் வளம் காக்கும் பனைகள்

கண்ணுக்கு தென்பட்ட அந்த மாதத்தில் மரத்தில் ஏறி பாளையை இறுக்கி விட வேண்டும். அப்பொழுது தான் பதநீர் கிடைக்கும்.

கம்போடியா நாட்டில் அதிகளவில் பனை மரங்கள் காணப்படுகின்றன. எங்கு திரும்பினாலும் பனை மரங்களும், பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருட்களை காண முடியும். கம்போடியா நாட்டு மக்கள் பனை மரத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள்.

நாம் மறந்த, பனை மரத்தை அதன் பெருமை கருதி ஆசை, ஆசையாய் வளர்த்து வருகிறார்கள். சாலை ஓரங்கள், கண்மாய்க்கரை ஓரங்களில் அதிகளவில் பனை மரங்களை நட்டு மண்ணரிப்பை தடுக்க வேண்டும்.


பனை ஒரு அறிவியல் அறிமுகம்

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனை மரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பனங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.

பதநீர் : பனை மரத்தில் நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்த பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்தில் மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.


சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிடுவார்கள். இதனால் மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயாராக இருக்கும். இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்.

மேக நோய் இருப்பவர்கள் பதநீரை 40 நாட்களிடைவிடாது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆறும்.

பயன் தரும் பாகங்கள்

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

மருத்துவப் பயன்கள்

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல் குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினால் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்குருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.


பனையோலை வேய்த இருப்பிடம் ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சல் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

Tags

Next Story