மாயா டாடா யார்..? அடுத்த தலைவர் அவரா..? டாடா குழுமத்தின் அடுத்த தலைமுறை தலைவர் யார்..?

மாயா டாடா யார்..? அடுத்த தலைவர் அவரா..? டாடா குழுமத்தின் அடுத்த தலைமுறை தலைவர் யார்..?

டாடா குழுமத்தின் அடுத்த தலைமுறை தலைவராக எதிர்பார்க்கப்படும் மாயா டாடா அடுத்த படம் ரத்தன் டாடா -கோப்பு 

டாடா குழுமம் ரத்தன் டாடாவை இழந்து தவிக்கும் இந்த சூழல் அடுத்த பொறுப்பேற்கும் குடும்ப வாரிசு யார் என்பது பேசுபொருளாகி உள்ளது.

ஆகச்சசிறந்த தொழில் அதிபராகவும் ஆகச் சிறந்த மனிதாபிமானம் கொண்டவராகவும் விளங்கிய ரத்தன் டாடா மாறைவுக்கு உலகமே கண்ணீர் வடிக்கிறது.இந்த சூழலில் உலக அளவில் ஒரு பெரும் நிறுவனமாக விரிந்து கிடைக்கும் சம்பிராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் மாயா டாடா அனுபவம் மற்றும் திறமையில் முன்னணியில் இருக்கிறார்.

டாடா குழுமம் ஏற்கனவே அடுத்த தலைமுறை டாடா குடும்பத் தலைவர்களின் குழுவால் வழிநடத்தப்பட்டு வருகிறது, இருப்பினும், இப்போது டாடாவின் அடுத்த தலைமுறை தலைவர்கள் யார் என்ற விவாதத்திற்கு மத்தியில் மாயா டாடா, லியா டாடா மற்றும் நெவில் டாடா ஆகியோர் கவனத்திற்கு வந்துள்ளனர்.

மாயா டாடா ஒரு பேய்ஸ் பிசினஸ் ஸ்கூல் மற்றும் வார்விக் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஆவார், அங்கு அவர் தனது அறிவை பொருத்தமான வணிகத் திறன்களுடன் இணைத்துக்கொண்டார்.

Tata Digital மற்றும் Tata Opportunities Fund உடன் பணிபுரிந்த அவர், லியா டாடா மற்றும் நெவில் டாடாவுடன் இணைந்து ரத்தன் டாடாவால் அடுத்த நிறுவனத்தை வழிநடத்த ஒப்புதல் பெற்றுள்ளார். Tata Neu செயலியை அறிமுகப்படுத்தியதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

வெறும் 34 வயதில், அவர் நிறுவனத்திற்குள் பெரிய முன்னேற்றங்களை கொண்டுவர முடிந்தது. வளர்ந்து விரிந்து பெரும் சாம்ராஜ்யமாக நிமிர்ந்து நிற்கும் டாடா தொழில் நிறுவனங்களின் எதிர்காலத்தை யாருடைய கைகளில் ஒப்படைத்தால் அது மென்மேலும் வளர்ச்சிப்பாதையை நோக்கிப்பயணிக்கும் என்ற மிகப்பெரிய வினா எல்லார் முன்னும் இருக்கிறது. அதில் நம்பிக்கைத் தரும் நட்சத்திரமாக, வணிக ஆளுமைமிக்கவராக மாயா மாறி இருக்கிறார்.

கொல்கத்தாவில் உள்ள முக்கிய புற்றுநோய் மருத்துவமனையின் மேற்பார்வை மற்றும் நிர்வாகத்துடன் ஒப்படைக்கப்பட்ட டாடா மருத்துவ மைய அறக்கட்டளையின் குழுவிலும் அவர் பணியாற்றுகிறார். இது அவரது பரோபகார, தயாள குணத்தின் மதிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் மறைந்த ரத்தன் டாடாவை உலகளவில் பேசவைக்கும் அளவுக்குப் போற்றப்பட்டது.

மாயா டாடாவின் குடும்ப வரலாறு

அவர் பெற்றுள்ள வலுவான வணிக புத்திசாலித்தனமே அவருக்கான அவரது செயல் திறனுக்கான சான்றாகும். இவர் ஆலு மிஸ்திரி- நோயல் டாடா தமபதியின் மகள். இவரது தாயார் ஆலு மிஸ்திரி, டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆவார்.

டாடா குழுமத்தின் வரலாற்றில் மிஸ்திரி குடும்பம் குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயாவின் அத்தை அதாவது சைரஸ் மிஸ்திரியின் மனைவி ரோஹிகா மிஸ்திரி, ரூ.56,000 கோடி சொத்து மதிப்புள்ள இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவர். அவரது குடும்பப் பின்னணி, கல்விச் செல்வம் மற்றும் வணிகத் திறமை ஆகியவை அவரது மறைந்த மாமா ரத்தன் டாடாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும், டாடா குழுமத்தின் எதிர்காலத்தை வழிநடத்துவதற்கும் பொருத்தமானவராக ஆக்குகிறது (2022 அறிக்கையின் அடிப்படையில் நிகர மதிப்பு மதிப்பீடு).

பொன்னான இதயம் கொண்ட இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் சோகமான மறைவுக்குப் பிறகு, டாடா குழுமத்தில் உள்ள அடுத்த தலைமுறை தலைவர்கள் மீது கவனம் திரும்பியுள்ளது. மாயா டாடா, லியா டாடா மற்றும் நெவில் டாடா ஆகியோர் அடுத்த டாடா தலைவர் யார் என்பதைப் பார்க்க உலகம் ஆவலுடன் காத்திருக்கும் சாத்தியமான வாரிசுகள்.

Tags

Next Story