/* */

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்: மக்கள் நீதி மையம் கோரிக்கை

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது

HIGHLIGHTS

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்: மக்கள் நீதி மையம் கோரிக்கை
X

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர் மத்திய மாவட்ட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், வரும் சுதந்திர தினத்தன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, தேசப் பாதுகாப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்திட வேண்டும். மக்களை கடுமையாக பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட அனைத்து வகை ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக கொடுக்கப்பட்டது என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 Aug 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...