பணி நேர நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டம்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Doctors Protest Today - அரசு மருத்துவர்கள் பணி நேர நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்யக்கோரி, அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்தவர்களின் பணி நேரத்தை நீட்டித்து பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி, அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டாக்டர் சுகுமார் தலைமையில், மாவட்ட நிர்வாகி டாக்டர் தனபால் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் பேசும்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர் களுக்கு காலை 8 மணி முதல், மாலை 4 மணி வரை பணி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் டாக்டர் ஆரோக்கிய ரூபன்ராஜ், பொருளாளர் டாக்டர் ஜெயராமன் உட்பட அரசு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu