/* */

குடும்ப பிரச்சனை: ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட N.முக்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

குடும்ப பிரச்சனை: ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை
X

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட N.முக்குளம் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகந்நாதன் வயது 45, திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். விவசாய விளைபொருட்கள் கமிஷன் வியாபாரம் செய்து வரும் ஜெகந்நாதன் இவர் தனது வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற நரிக்குடி காவல்துறையினர் ஜெகந்நாதன் உடலை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தினர், முதற்கட்ட விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்டது இந்த கிராம பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 14 Feb 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை