/* */

பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை

பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை
X

விருதுநகர் யூனியன் அலுவலகம் அருகே கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் பாலமுருகராஜா (41). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பாலமுருகராஜா மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி பூரணஜெயஆனந்த், வியாபாரி பாலமுருகராஜாவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 23 Jun 2022 8:28 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...