நீதிமன்றத்தில் தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த போலீஸார்
போக்ஸோ கைதி சுரேஷ்
இந்த வழக்கின் விசாரணை திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிறையிலிருந்த சுரேஷை, விருதுநகர் ஆயுதப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்திருந்தனர். நீதிமன்ற வளாகத்தில் போலீசாருடன் நின்றுகொண்டிருந்த சுரேஷ், சிறுநீர் கழிக்கச்செல்வதாக கழிப்பறைக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்குச் சென்ற சுரேஷ், போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தப்பி ஓடிய சுரேஷை 10 நிமிடத்தில், திருவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிமன்ற வளாகத்திலிருந்து, போக்சோ கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu