/* */

நெல் கொள்முதல் தாமதம்: சாலையில் டிராக்டரை நிறுத்தி விவசாயிகள் மறியல்

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் கால தாமதம் செய்வதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையில் டிராக்டரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் தாமதம்: சாலையில் டிராக்டரை நிறுத்தி விவசாயிகள் மறியல்
X

கான்சாபுரம்- அத்திக் கோயில் பகுதியில் டிராக்டரை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், கூமாப்பட்டி, கோட்டையூர், உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதியில் சுமார் 7400 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் தற்போது அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கான்சாபுரம் பகுதியில் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் கால தாமதம் செய்வதால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 50 டன் அளவிற்கு நெல் குவிந்து கிடக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கான்சாபுரம்- அத்திக் கோயில் பகுதியில் டிராக்டரை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கூடுதலாக நெல் தூற்றும் இயந்திரம் அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூமாப்பட்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தை கை விட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 29 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு