/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது: வாகனம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல். ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பு.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது: வாகனம் பறிமுதல்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல். ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் உள்ள பந்தப்பாறை ஓடையில் தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மங்காபுரம் மேல்பக்கம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராகவன் என்பவர் டிராக்டர் வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டு வந்துள்ளார். அவரைப் பிடித்து வருவாய்த்துறையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் மங்காபுரத்தை சேர்ந்த வாகன உரிமையாளர் மாரியப்பன் என்பவருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்த நிலையில் அவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். ஓட்டிவந்த ராகவனை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான வாகன உரிமையாளர் மாரியப்பனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 31 Jan 2022 3:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்