அனுமதிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தால் சதுரகிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்படும்

பைல் படம்
பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று சதுரகிரி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். நாளை 8ம் தேதி (வியாழன் கிழமை) ஆவணி மாத வளர்பிறை பிரதோஷம் நாளை முன்னிட்டு, மலைக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை 8ம் தேதி முதல், 11ம் தேதி (ஞாயிறு கிழமை) வரை தொடர்ந்து 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் திடீர் மழை பெய்தால், கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வளர்பிறை பிரதோஷம் மற்றும் ஆவணி மாத பௌர்ணமி உள்ளிட்ட 4 நாட்களும் தினசரி காலை 7 மணி முதல், நன்பகல் 12 மணி வரை மட்டுமே மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோவிலுக்குச் செல்லும் வழிகளில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக, கடந்த ஆவணி மாத அமாவாசை பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. தற்போது பௌர்ணமி பூஜைகளுக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்ற தகவல், சுந்தரமகாலிங்கம் சுவாமி பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu